கல்லூரியில் சென்று கலந்துரையாடி படிக்க முடியவில்லையே... தனிமை விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட கோவை மாணவி..!

கோவை: கோவையில் தொடர்ந்து ஆன்லைன் வகுப்பில் படித்து வந்த கல்லூரி மாணவி, கல்லூரியில் சென்று சக மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடி படிக்க முடியாத சூழ்நிலையால் தனிமையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டார்.


கோவை: கோவையில் தொடர்ந்து ஆன்லைன் வகுப்பில் படித்து வந்த கல்லூரி மாணவி, கல்லூரியில் சென்று சக மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடி படிக்க முடியாத சூழ்நிலையால் தனிமையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவையில் கல்லூரி மாணவி விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதையடுத்து காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில், இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை சிங்காநல்லூர் சவுரிபாளையம் பகுதியில் உள்ள ஜி.வி. ரெசிடென்சியில் வசிப்பவர் ராஜன். இவரது மகள் சினேஹா. கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படிக்கின்றார். இவர் கொரோனா ஊரடங்கினால், கல்லூரி மூடப்பட்டதை அடுத்து கல்லூரிக்கு செல்லவில்லை. ஆன் லைன் வகுப்பிலேயே படித்து வந்திருக்கின்றார். ஆனால், கல்லூரிக்கு நேராக சென்று வகுப்பை கவனிக்க முடியாமல் போனதால், மன சோர்வுடனே சினேஹா இருந்து வந்திருக்கிறார்.

நேற்று இரவு தன் அறைக்கு சென்ற சினேஹா தன்னால் கல்லூரிக்கு சென்று கற்க முடியவில்லையென வருத்தமடைந்திருக்கிறார். அந்த வேதனையால், உடனே அங்கிருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தால் சினேஹா குடும்பத்தார் சோகத்தில் மூழ்கினர். கல்லூரி மாணவி தற்கொலை குறித்து சிங்காநல்லூர் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...