கோவை: கோவை மாநகராட்சி சார்பில் பயோமைனிங் திட்டம் தொடர்பாக வெள்ளலூர் குப்பைகிடங்கில் தேங்கியுள்ள குப்பைகளை டிரோன் கேமரா மூலம் அளவிடும் பணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது.
கோவை: கோவை மாநகராட்சி சார்பில் பயோமைனிங் திட்டம் தொடர்பாக வெள்ளலூர் குப்பைகிடங்கில் தேங்கியுள்ள குப்பைகளை டிரோன் கேமரா மூலம் அளவிடும் பணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது.
தற்போது, மீண்டும் இரண்டாம் கட்ட ஆய்வுக்காக டிரோன மூலம் குப்பைகளை அளவிட திட்டமிடப்பட்டுள்ளது என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
100 வார்டு குப்பை..!

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தினமும் 800 முதல் 1,000 டன் வரை குப்பைகள் சேகரமாகிறது. இந்த குப்பைகள் அனைத்தும் வெள்ளலூரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 650 ஏக்கர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் 60 ஏக்கர் பரப்பளவில் 9 லட்சம் மெட்ரிக்டன் அளவிற்கு தரம்பிரிக்கப்படாத குப்பைகள் தேக்கம் அடைந்து உள்ளன.
சுகாதார சீர்கேட்டை சரிசெய்ய பயோமைனிங் திட்டம்.
இந்த குப்பைகளால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், ஈக்கள் தொல்லையும் அதிகமாக உள்ளது. இந்த குப்பைகளை பயோ மைனிங் முறையில் அழிக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக ரூ.60 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டது.இந்த திட்டத்தை தனியார் அமைப்பு செயல்படுத்துகிறது. இதற்காக வெள்ளலூர் குப்பை கிடங்கில் தேங்கியுள்ள குப்பைகள் அளவு எவ்வளவு, என்ன மாதிரியான குப்பைகள் அதிகமாக தேங்கியுள்ளன என்பது குறித்து அளவீடு செய்ய அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குரியன் ஜோசப் தலைமையிலான குழுவினர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரவழைக்கப்பட்டனர்.
நவீன கேமராக்கள் மூலம் அளவீடு
இவர்கள் டிரோன் கேமராவில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராக்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுன் இங்கு தேங்கியுள்ள குப்பைகளை அளவீடும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின் பயோ மைனிங் திட்டம் மூலம் தினமும் 40 டன் வரை குப்பைகள் அழிக்கப்பட்டு உரமாக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே இரண்டாம் கட்ட ஆய்வுக்காக மீண்டும் அண்ணா பல்கலைக்கழக குழுவினர் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு வரவுள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பயோ மைனிங் திட்டம் தொடர்பாக இரண்டாம் கட்ட ஆய்வுக்காக அண்ணா பல்கலைக்கழக குழுவினர் விரைவில் மீண்டும் வெள்ளலூர் வரவுள்ளனர். இவர்கள் மீண்டும் டிரோன் கேமிரா மூலம் குப்பைகளை அளவிடும் பணி மேற்கொண்டு அதன் பின் இரண்டாம் கட்ட ஆய்வறிக்கையை சமர்பிப்பார்கள். அதன் பின் தினமும் கூடுதலாக எவ்வுளவு டன் வரை குப்பைகளை அழிக்க முடியும் என கணக்கீடு செய்து குப்பைகள் அழிப்பு பணி தொடரும்,’’ என்றார்.