கோவை: கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன், கோவை திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர்கள், மாவட்ட ஆட்சியர் நாகராஜனை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
கோவை: கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன், கோவை திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர்கள், மாவட்ட ஆட்சியர் நாகராஜனை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
பின்னர் எம்.பி பி.ஆர் நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவையில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாதவாறு முன்னரே போதுமான அளவு ஆக்சிஜனை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டது. மேலும், மாவட்ட கண்காணிப்பு அலுவலரான முருகானந்தம், சுகாதாரத்துறை செயலாளர் போன்றவர்களிடம் ஏற்கனவே இது தொடர்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளது என தகவல்கள் வருகிறது. இதனை தவிர்க்கும் அளவுக்கு ஆக்சிஜன்களை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், கோவை தடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளை விவகாரத்தில் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும். 30 நாட்கள் அவகாசத்தில் யானைகள் வழித்தடம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அவ்வழியாக உள்ள செங்கல் சூளைகள் இயங்க அனுமதிக்காமல், பிற செங்கல் சூளைகள் நீதிமன்றத்தின் வழிக்காட்டுதல் படி இயங்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு நடராஜன் கூறினார்.