கோவை: கோவையில் தடையை மீறி தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் தடையை மீறி தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டோர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை, கடந்த 2ம் தேதி நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் காரணமாகதேர்தலில் வெற்றி பெறுவோர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.
மேலும், கடந்த 2-ம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது.தேர்தல் ஆணையத்தின் தடை மற்றும் முழு ஊரடங்கு தடையை மீறி கோவையில் சிலர் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
கோவை வின்சென்ட் ரோடு, டவுன்ஹால் மணிக்கூண்டு, மேட்டூர், மாகாளியம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களில் ஒன்று சேர்ந்து, சிலர் கூட்டமாக தேர்தல் வெற்றியை கொண்டாடினர்.
தடையை மீறி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டோர் மீது உக்கடம் மற்றும் போத்தனூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை, கடந்த 2ம் தேதி நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் காரணமாகதேர்தலில் வெற்றி பெறுவோர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.
மேலும், கடந்த 2-ம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது.தேர்தல் ஆணையத்தின் தடை மற்றும் முழு ஊரடங்கு தடையை மீறி கோவையில் சிலர் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
கோவை வின்சென்ட் ரோடு, டவுன்ஹால் மணிக்கூண்டு, மேட்டூர், மாகாளியம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களில் ஒன்று சேர்ந்து, சிலர் கூட்டமாக தேர்தல் வெற்றியை கொண்டாடினர்.
தடையை மீறி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டோர் மீது உக்கடம் மற்றும் போத்தனூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.