கோவை: கோவையில் கொரோனா தடுப்பு காரணமாக சம்பந்தப்பட்ட தெருவை மூடியதால், வேலைக்கு செல்ல முடியாத மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவையில் கொரோனா தடுப்பு காரணமாக சம்பந்தப்பட்ட தெருவை மூடியதால், வேலைக்கு செல்ல முடியாத மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று கோவை குப்புசாமி மருத்துவமனை அருகில் உள்ள பெருமாள் கோயில் வீதி பகுதியில் ஒரு வீட்டில் உள்ள நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பாக அந்த வீட்டுக்கு செல்லக் கூடிய பகுதியில் தகரம் வைத்து தடுப்பு அமைக்கப்பட்டது. அந்த வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் குடியிருந்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் அவர்கள் இன்று காலையில் வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காகப் புறப்பட்டனர். தடுப்பின் காரணமாக இரு சக்கர வாகனத்தில் மூலமாகவும் நடந்து செல்லவும் முடியாத சூழ்நிலையால் வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. அதனால் அவர்கள் இந்தப் பகுதியில் நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஒரு வீட்டில் ஒரு தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்காக அந்தப் பகுதியில் உள்ள 50 குடும்பத்தினர் பாதிக்கப்படுகின்றனர். ஆதலால், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நாங்கள் அந்தப் பகுதியில் பயணிக்கவும் வேலைகளுக்கு செல்லவும் எங்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பைச் சேர்ந்த அந்தப் பகுதி மக்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று கோவை குப்புசாமி மருத்துவமனை அருகில் உள்ள பெருமாள் கோயில் வீதி பகுதியில் ஒரு வீட்டில் உள்ள நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பாக அந்த வீட்டுக்கு செல்லக் கூடிய பகுதியில் தகரம் வைத்து தடுப்பு அமைக்கப்பட்டது. அந்த வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் குடியிருந்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் அவர்கள் இன்று காலையில் வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காகப் புறப்பட்டனர். தடுப்பின் காரணமாக இரு சக்கர வாகனத்தில் மூலமாகவும் நடந்து செல்லவும் முடியாத சூழ்நிலையால் வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. அதனால் அவர்கள் இந்தப் பகுதியில் நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஒரு வீட்டில் ஒரு தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்காக அந்தப் பகுதியில் உள்ள 50 குடும்பத்தினர் பாதிக்கப்படுகின்றனர். ஆதலால், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நாங்கள் அந்தப் பகுதியில் பயணிக்கவும் வேலைகளுக்கு செல்லவும் எங்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பைச் சேர்ந்த அந்தப் பகுதி மக்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.