'என்‌ அரசியல்‌ பணிக்கு வித்திட்ட தலைவர்‌ நம்மவர்‌ கமல்ஹாசன்‌ அவர்களுக்கு என்‌ நெஞ்சார்ந்த நன்றிகள்‌!' மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் அறிக்கை

கோவை: என்‌ அரசியல்‌ பணிக்கு வித்திட்டு, தேர்தலில்‌ போட்டியிடும்‌ வாய்ப்பை வழங்கி ஊக்குவித்த தலைவர்‌ நம்மவர்‌ கமல்ஹாசன்‌ அவர்களுக்கு, என்‌ நெஞ்சார்ந்த நன்றிகள்‌ என்று மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவரான டாக்டர் ஆர்.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.



கோவை: என்‌ அரசியல்‌ பணிக்கு வித்திட்டு, தேர்தலில்‌ போட்டியிடும்‌ வாய்ப்பை வழங்கி ஊக்குவித்த தலைவர்‌ நம்மவர்‌ கமல்ஹாசன்‌ அவர்களுக்கு, என்‌ நெஞ்சார்ந்த நன்றிகள்‌ என்று மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவரான டாக்டர் ஆர்.மகேந்திரன், தெரிவித்துள்ளார்.

‘‘மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சி துவங்கப்பட்டு மூன்று ஆண்டுகளே ஆன நிலையில்‌, எங்கள்‌ கொள்கைகளின்‌ மீதும்‌, நேர்மையின்‌ மீதும்‌ நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைத்து நேர்மையாளர்களுக்கும்‌, என்‌ மனமார்ந்த நன்றிகள்‌! மிக நீண்ட வரலாறும்‌, பலமும்‌ கொண்ட கட்சிகளுக்கு நிகராக, கடுமையான போட்டியை தேர்தல்‌ களத்தில்‌ உருவாக்கியதே, எங்கள்‌ மகத்தான வெற்றியாகக் கருதுகிறேன்‌! எங்களுக்கு கிடைத்த ஒவ்வொரு ஓட்டும்‌ நேர்மையான ஓட்டு என்பதில்‌ பெருமிதம்‌ கொள்கிறேன்‌!

கோவை சிங்காநல்லூர்‌ தொகுதியில்‌ எனக்கு வாக்களித்த 36,855 வாக்காளர்களுக்கும்‌, என்‌ நன்றியை உரித்தாக்குகிறேன்‌. எனக்கு தமிழகம்‌ முழுவதிலும்‌ இருந்தும்‌, வெளிநாடுகளில்‌ இருந்தும்‌, நல்லாசியும்‌, ஆதரவும்‌, வாழ்த்துகளையும்‌ வழங்கிய, அனைத்து நல்லுள்ளங்களுக்கும்‌ என்‌ மனமார்ந்த நன்றிகளைத்‌ தெரிவித்துக்‌ கொள்கின்றேன்‌!

கோவை சிங்காநல்லூர்‌ தொகுதியில்‌ அல்லும்‌, பகலும்‌ அயராது உழைத்த கட்ச நிர்வாகிகள்‌, தொண்டர்கள்‌ மற்றும்‌ களப்பணி ஆற்றிய அனைத்து தன்னார்வலர்களுக்கும்‌ என்‌ இதயப்பூர்வமான நன்றிகள்‌! போட்டியிட்ட முதல்‌ சட்ட மன்றத் தேர்தலிலேயே, தமிழகமெங்கும்‌ மக்கள்‌ நீதி மய்யம்‌ வாக்குகளை பெறுவதற்கு, அயராமல்‌ உழைத்த அனைவருக்கும்‌ என்‌ உளமார்ந்த நன்றிகள்‌. மேலும்‌, என்‌ அனைத்து நிலைகளிலும்‌ எனக்கு உறுதுணையாக இருக்கும்‌ என்‌ குடும்பத்தார்‌, உறவினர்கள்‌ மற்றும்‌ நண்பர்களுக்கு என்‌ மனமார்ந்த நன்றிகள்‌.

கோவை சிங்காநல்லூர்‌ தொகுதியில்‌ வெற்றி பெற்றிருக்கும்‌ ஜெயராம்‌ அவர்கள்‌ சிறப்பான மக்கள்‌ சேவையாற்றிட என்‌ வாழ்த்துக்கள்‌. தேர்தலோடு முடிந்து விடுவதில்லை அரசியல்‌! மக்கள்‌ நலனுக்காகவும்‌, தமிழகத்தின்‌ வளர்ச்சிக்காகவும்‌ தொடர்ந்து குரல்‌ கொடுத்துக்கொண்டே இருப்பேன்‌ என்று நன்றியோடு தெரிவித்துக்கொள்கிறேன்‌!'' என்று மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...