திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பல்லடம் தொகுதியில் 40 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பல்லடம் தொகுதியில் 40 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
திருப்பூர் 8 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கையைப் பொறுத்தும், எத்தனை சுற்றுகள் எண்ணப்படுகின்றன என்பதை பொறுத்தும் தேர்தல் முடிவுகள் விரைவாகவோ அல்லது தாமதமாகவோ முடிவுகள் வெளிவரும்.
திருப்பூரில் தொகுதி வாரியாக வேட்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை சுற்றுக்கள் விவரம் வருமாறு;
தாராபுரம் தொகுதியில் 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் 25 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன.
காங்கேயம் தொகுதியில் 26 பேர் இருந்தபோதிலும் வேட்பாளர்கள் 26 என்பதால் வாக்கு எண்ணிக்கை 27 சுற்றுகளாக நடைபெறுகிறது.
அவினாசியில் 12 வேட்பாளர்களுக்கு 29 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.திருப்பூர் வடக்கு தொகுதியில் 15 வேட்பாளர்கள் களத்தில் இருக்கும் நிலையில் 39 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
திருப்பூர் தெற்கு தொகுதியில் 20 வேட்பாளர்கள் இருக்கின்றனர். வாக்கு எண்ணிக்கையானது 29 சுற்றுகளாக நடைபெறுகிறது.
பல்லடம் தொகுதியில் 20 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். இங்கு வாக்கு எண்ணிக்கை 40 சுற்றுகளாக நடைபெறுகிறது.
உடுமலைப்பேட்டையில் 15 வேட்பாளர்கள் உள்ளனர். வாக்கு எண்ணிக்கையானது 28 சுற்றுகள் நடைபெற உள்ளன. மடத்துக்குளம் தொகுதியில் 15 வேட்பாளர்கள் உள்ளனர்.இங்கு 28 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
திருப்பூர் 8 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கையைப் பொறுத்தும், எத்தனை சுற்றுகள் எண்ணப்படுகின்றன என்பதை பொறுத்தும் தேர்தல் முடிவுகள் விரைவாகவோ அல்லது தாமதமாகவோ முடிவுகள் வெளிவரும்.
திருப்பூரில் தொகுதி வாரியாக வேட்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை சுற்றுக்கள் விவரம் வருமாறு;
தாராபுரம் தொகுதியில் 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் 25 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன.
காங்கேயம் தொகுதியில் 26 பேர் இருந்தபோதிலும் வேட்பாளர்கள் 26 என்பதால் வாக்கு எண்ணிக்கை 27 சுற்றுகளாக நடைபெறுகிறது.
அவினாசியில் 12 வேட்பாளர்களுக்கு 29 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.திருப்பூர் வடக்கு தொகுதியில் 15 வேட்பாளர்கள் களத்தில் இருக்கும் நிலையில் 39 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
திருப்பூர் தெற்கு தொகுதியில் 20 வேட்பாளர்கள் இருக்கின்றனர். வாக்கு எண்ணிக்கையானது 29 சுற்றுகளாக நடைபெறுகிறது.
பல்லடம் தொகுதியில் 20 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். இங்கு வாக்கு எண்ணிக்கை 40 சுற்றுகளாக நடைபெறுகிறது.
உடுமலைப்பேட்டையில் 15 வேட்பாளர்கள் உள்ளனர். வாக்கு எண்ணிக்கையானது 28 சுற்றுகள் நடைபெற உள்ளன. மடத்துக்குளம் தொகுதியில் 15 வேட்பாளர்கள் உள்ளனர்.இங்கு 28 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.