வால்பாறை: வால்பாறையில் கன்னி வைத்து காட்டு கோழியை பிடிக்க முயற்சி செய்த வட மாநிலத் தொழிலாளர்களுக்கு வனத்துறை ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.
வால்பாறை: வால்பாறையில் கன்னி வைத்து காட்டு கோழியை பிடிக்க முயற்சி செய்த வட மாநிலத் தொழிலாளர்களுக்கு வனத்துறை ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் வன விலங்குகள் தவிர காட்டுக் கோழிகள் இருவாட்சி பறவைகள் போன்றவை வாழ்கின்றன. வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகமாக வேலை செய்து வருகின்றனர். வால்பாறை அருகே மானாம்பள்ளி வன சரகத்திற்கு உட்பட்ட சங்கிலி ரோடு எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் உமேஷ் ஓரா, மதியாஸ் முண்டா இருவரும் காட்டு கோழியை பிடிக்க தேயிலைத் தோட்டத்தில் கன்னி வைத்தனர்.

மானாம்பள்ளி வனச்சரகத்தில் உட்பட்ட இடத்தில் கன்னி வைக்கப்பட்டதை கண்டறிந்த வனத்துறையினர், காட்டுக்கோழியை பிடிக்க முயற்சி செய்த இருவரையும் கைது செய்தனர். ஆனைமலை புலிகள் காப்பக இணை இயக்குனர் ஆரோக்கிய சேவியர் உத்தரவின்பேரில் இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தியதை அடுத்து இருவரும் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். வன விலங்குகளை தொந்தரவு செய்தாலோ வன விலங்குகளை பிடிக்க முயற்சி செய்தாலோ அது வன சட்டத்தின்படி குற்றமாகும். இத்தகைய குற்றத்தில் ஈடுபடுவோர் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் வன விலங்குகள் தவிர காட்டுக் கோழிகள் இருவாட்சி பறவைகள் போன்றவை வாழ்கின்றன. வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகமாக வேலை செய்து வருகின்றனர். வால்பாறை அருகே மானாம்பள்ளி வன சரகத்திற்கு உட்பட்ட சங்கிலி ரோடு எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் உமேஷ் ஓரா, மதியாஸ் முண்டா இருவரும் காட்டு கோழியை பிடிக்க தேயிலைத் தோட்டத்தில் கன்னி வைத்தனர்.
மானாம்பள்ளி வனச்சரகத்தில் உட்பட்ட இடத்தில் கன்னி வைக்கப்பட்டதை கண்டறிந்த வனத்துறையினர், காட்டுக்கோழியை பிடிக்க முயற்சி செய்த இருவரையும் கைது செய்தனர். ஆனைமலை புலிகள் காப்பக இணை இயக்குனர் ஆரோக்கிய சேவியர் உத்தரவின்பேரில் இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தியதை அடுத்து இருவரும் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். வன விலங்குகளை தொந்தரவு செய்தாலோ வன விலங்குகளை பிடிக்க முயற்சி செய்தாலோ அது வன சட்டத்தின்படி குற்றமாகும். இத்தகைய குற்றத்தில் ஈடுபடுவோர் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.