பொள்ளாச்சி அருகே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு முகக்கவசம் அணிவித்த தேநீர் கடை உரிமையாளர்!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு முகக் கவசம் அணிவித்து தேநீர் கடையின் உரிமையாளர் கிராமத்தினர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு முகக் கவசம் அணிவித்து தேநீர் கடையின் உரிமையாளர் கிராமத்தினர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்

கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை சுகாதாரத்துறையினர் கூறிவருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள டி.நல்லி கவுண்டன் பாளையத்தை சேர்ந்த தவமணி, அதே ஊரில் தேநீர் கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு தேநீர் அருந்த வரும் வாடிக்கையாளர்கள் அனைவரிடமும் முக கவசம் அணிந்து வருமாறு கூறுகிறார்.



முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தனது தேநீர் கடைக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள முன்னால் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு முகக்கவசம் அணிவித்தார்.

அவரின் வித்தியாசமான விழிப்புணர்வு முயற்சி பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. தேநீர் அருந்த வரும் அனைவரும், தலைவர்களின் சிலைகள் கூட முகக்கவசம் அணிந்திருக்கும் போது கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க முக கவசம் அணிய வேண்டும் என்பதை உணர்ந்துள்ளனர். முகக் கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை பின்பற்றி வருகின்றனர். தலைவர்கள் சிலைக்கு முக கவசம் அணிவித்து கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய தேநீர் கடை உரிமையாளர் தவமணியை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...