கோவை: கோவை அருகே துருப்பிடித்து கீழே விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவை அருகே துருப்பிடித்து கீழே விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை பொள்ளாச்சி ரோடு ஒத்தக்கால்மண்டபம் அடுத்த உப்பிலிபாளையம் சர்ச் தெரு பகுதியில் வசிப்பவர் இடையைச் சந்திரன். இவர் வீட்டின் அருகே மிகப் பழமையான மின்கம்பம் ஒன்று உள்ளது. அந்த மின் கம்பத்தில் இருந்து அந்த பகுதியில் உள்ள 25-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மின் கம்பத்தின் அடிப்பகுதி துருப்பிடித்து கீழே விழும் நிலையில் ஆடிக் கொண்டிருக்கிறது. மின் கம்பத்தை அகற்றி புதிய கம்பம் அமைக்கும்படி பலமுறை கோரிக்கை விடுத்தும் மின்வாரியத்தினர் கண்டுகொள்ளவில்லை. உடனடியாக புதிய மின்கம்பம் அமைக்கும் படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். துருப்பிடித்த மின்கம்பம் கீழே விழுந்தால் மின்சாரம் பாய்ந்து பலர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் உப்பிலிபாளையம் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கோவை பொள்ளாச்சி ரோடு ஒத்தக்கால்மண்டபம் அடுத்த உப்பிலிபாளையம் சர்ச் தெரு பகுதியில் வசிப்பவர் இடையைச் சந்திரன். இவர் வீட்டின் அருகே மிகப் பழமையான மின்கம்பம் ஒன்று உள்ளது. அந்த மின் கம்பத்தில் இருந்து அந்த பகுதியில் உள்ள 25-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மின் கம்பத்தின் அடிப்பகுதி துருப்பிடித்து கீழே விழும் நிலையில் ஆடிக் கொண்டிருக்கிறது. மின் கம்பத்தை அகற்றி புதிய கம்பம் அமைக்கும்படி பலமுறை கோரிக்கை விடுத்தும் மின்வாரியத்தினர் கண்டுகொள்ளவில்லை. உடனடியாக புதிய மின்கம்பம் அமைக்கும் படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். துருப்பிடித்த மின்கம்பம் கீழே விழுந்தால் மின்சாரம் பாய்ந்து பலர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் உப்பிலிபாளையம் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.