கோவை அருகே தண்ணீரில் மின்சாரம் பாய்ந்ததால் மீன்பிடிக்க சென்ற இருவர் பலி!

கோவை: கோவை அருகே குளத்தில் மீன் பிடித்த போது அறுந்து கிடந்த மின் வயரில் இருந்து தண்ணீர் மின்சாரம் பாய்ந்ததால் இருவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



கோவை: கோவை அருகே குளத்தில் மீன் பிடித்த போது அறுந்து கிடந்த மின் வயரில் இருந்து தண்ணீர் மின்சாரம் பாய்ந்ததால் இருவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மதுக்கரை வழுக்குப் பாறையில் ராமராஜ் என்பவரின் தோட்டத்தில் கேரளா மாநிலம் கொழிஞ்சாம்பாறை பகுதியை சேர்ந்த ராசு மற்றும் மீனாட்சிபுரம் பகுதியைச் மல்லிகா இருவரும் வேலை பார்க்கின்றனர்.

தோட்ட வேலையை முடித்துக்கொண்டு, இருவரும் தோட்டத்தின் அருகில் உள்ள குளத்தில் மீன் பிடிக்க சென்றனர். அந்த இடத்தில் மின் வயர் ஒன்று அறுந்து குளத்தில் கிடந்திருக்கிறது.



அதைக் கவனிக்காமல் முதலில் குளத்தில் இறங்கிய ராசு, தண்ணீரில் பாய்ந்த மின்சாரத்தால் சம்பவ இடத்திலேயே பலியானார்.



என்ன நடந்தது என்று தெரியாமல் ராசுவை காப்பாற்ற சென்ற மல்லிகாவும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அறுந்து கிடந்த மின்கம்பியில் இருந்து தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...