கோவையில் வாக்கு எண்ணிக்கை ஒத்திகை இன்று  நடந்தது

கோவையில் வாக்கு எண்ணிக்கை ஒத்திகை இன்று  நடந்தது


 கோவை: கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான ஒத்திகை நிகழ்ச்சி, வாக்கு எண்ணும் மையமான அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில்இன்று நடந்தது.

தமிழகத்தில் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

வாக்கு எண்ணிக்கைக்கு இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளதால் வாக்கு எண்ணும் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடந்தது.

இது குறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வாக்கு எண்ணும் மையத்தில் மேசைகள், மின் விளக்குகள் உள்பட வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏறப்படுத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையை பதிவு செய்வதற்காக அனைத்து மேசையிலும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கையின் போது எந்த குளறுபடிகளும் நடக்காமல் இருக்கவும், வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளும் நடைமுறைகள் குறித்து அலுவலர்கள் தெரிந்துகொள்ளும் வாக்கு எண்ணும் ஒத்திகை நிகழ்ச்சிஇன்று நடந்தது. இதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை சீல் பிரித்தல், வாக்குகள் எண்ணும் விதம், வாக்குகள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் குறித்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. இதில் மாவட்டத்தின் பத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் உட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...