கோவை: கிணத்துக்கடவு அருகே தமிழக-கேரள எல்லையில் வருவாய் துறையினர் நடத்திய வாகன தணிக்கையில் இ-பாஸ் இல்லாமல் பயணித்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே தமிழக-கேரள எல்லையில் வருவாய் துறையினர் நடத்திய வாகன தணிக்கையில் இ-பாஸ் இல்லாமல் பயணித்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை மிகத் தீவிரமாக பரவி வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வர இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கிணத்துக்கடவு அருகே உள்ள தமிழக கேரள எல்லைப் பகுதியான வீரப்ப கவுண்டனூரில் வருவாய் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். கிணத்துக்கடவு வருவாய் ஆய்வாளர் ராம்ராஜ் தலைமையில் விமல், மது கண்ணன், பன்னீர்செல்வம் ஆகிய கிராம நிர்வாக அலுவலர்கள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்த கார்கள், இருசக்கர வாகனம், சரக்கு வாகனங்களில் வந்தவர்களிடம் தமிழகத்திற்குள் வர இ-பாஸ் இருக்கிறதா என்று சோதனை செய்தனர்.

இ-பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டும் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இ-பாஸ் இல்லாமல் வந்தவர்கள் திருப்பி அனுப்பினர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை மிகத் தீவிரமாக பரவி வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வர இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கிணத்துக்கடவு அருகே உள்ள தமிழக கேரள எல்லைப் பகுதியான வீரப்ப கவுண்டனூரில் வருவாய் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். கிணத்துக்கடவு வருவாய் ஆய்வாளர் ராம்ராஜ் தலைமையில் விமல், மது கண்ணன், பன்னீர்செல்வம் ஆகிய கிராம நிர்வாக அலுவலர்கள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்த கார்கள், இருசக்கர வாகனம், சரக்கு வாகனங்களில் வந்தவர்களிடம் தமிழகத்திற்குள் வர இ-பாஸ் இருக்கிறதா என்று சோதனை செய்தனர்.
இ-பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டும் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இ-பாஸ் இல்லாமல் வந்தவர்கள் திருப்பி அனுப்பினர்.