கோவை: கொரோனா இரண்டாவது அலையில் நெருக்கடி தரும் வங்கிகளை தடுக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சருக்கு கொடிசியா கோரிக்கை விடுதுள்ளது.
கோவை: கொரோனா இரண்டாவது அலையில் நெருக்கடி தரும் வங்கிகளை தடுக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சருக்கு கொடிசியா கோரிக்கை விடுதுள்ளது.
இது குறித்து கொடிசியா சார்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரமனுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளில் கூறப்பட்டுள்ளதாவது;
“சென்ற ஆண்டு கோவிட் 19 பெருந்தொற்று பரவி பொருளாதார சிக்கல் ஏற்பட்டபோது அவசர கடன் வரி உத்தரவாத (ECLGS) திட்டத்தின்கீழ் 20% கடனுதவி வழங்கியதற்கு மத்திய நிதியமைச்சருக்கு கொடிசியா நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள கோவிட் 19 பெருந்தொற்று இரண்டாம் அலையால், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முழுமையாக மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ளன.எதிர்வரும் 6 மாதங்களில் உற்பத்தி சார்ந்த செயல்பாடுகள் வெகுவாக குறைய வாய்ப்புகள் உள்ளன.
இந்தியா முழுவதும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளின் உற்பத்தி, போக்குவரத்து உள்ளிட்ட பல செயல்பாடுகளும் கடமையாக பாதிக்கப்பட்டிருப்பதோடு, விற்பனையும் நேரடியாக பாதிக்கப்பட்டு, நிதிப் பற்றாக்குறைக்கு வழிவகுத்திருக்கிறது. வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை சரியாக செலுத்த இயலாமல் போவதற்கும் இது காரணமாக அமைகிறது. மூலப்பொருட்கள் 70% வரை அசாதாரணமாக விலை உயர்ந்ததும் இந்த கடுமையான நிதி பற்றாக் குறைக்கு காரணம் ஆகும்.
மேற்சொன்ன காரணங்கள் காரணமாக முன்பு அளிக்கப்பட்ட 20% கடன் உதவி தொகையை முழுவதும் காணாமல் செய்துவிட்டன. அந்த வகையில், இந்த இரண்டாம் அலை நோய்ப் பரவலில் இருந்து விடுபட, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தொழிற்சாலைகள் செலுத்த வேண்டிய கடன் தொகைகள் மற்றும் அதற்கான வட்டி தொகை ஆகியவற்றுக்கு 6 மாத கால கடன் விடுப்புக் காலம் அளிக்கப்பட வேண்டும்.
தற்போது உள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் வகையில் தொழிற்சாலைகளுக்கு அவற்றின் நடப்பு மூலதன கடன் அல்லது ரொக்கக் கடன் வசதி ஆகியவற்றில் கூடுதலாக 20% கடனுதவியை எந்த நிபந்தனையும் இல்லாமல் வங்கிகளும், வங்கிசாரா நிதி நிறுவனங்களும் வழங்க வேண்டும். இரண்டு வருட கால கடன் விடுப்பு காலத்திற்கு பிறகு இந்த கூடுதல் கடன் தொகையை திருப்பி செலுத்தும் காலத்தை 6 ஆண்டுகளாக நிர்ணயிக்க வேண்டும். தற்போது உள்ள சூழலை கவனத்தில் கொண்டு இயங்காச் சொத்து நடைமுறைகள் குறித்த தளர்வுகள் வரும் 31.03.2022 வரை நீட்டிக்கப்பட வேண்டும்.
வங்கிகளிடமிருந்து சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் கடன் தொகையைச் செலுத்துமாறு கடுமையான அழுத்தம் தரப்படுகிறது. இந்த சிக்கலான சூழ்நிலையில் மத்திய நிதியமைச்சர் தலையிட்டு சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கு வங்கிகள் அளிக்கும் நெருக்கடியை தடுத்து உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு கொடிசியா கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து கொடிசியா சார்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரமனுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளில் கூறப்பட்டுள்ளதாவது;
“சென்ற ஆண்டு கோவிட் 19 பெருந்தொற்று பரவி பொருளாதார சிக்கல் ஏற்பட்டபோது அவசர கடன் வரி உத்தரவாத (ECLGS) திட்டத்தின்கீழ் 20% கடனுதவி வழங்கியதற்கு மத்திய நிதியமைச்சருக்கு கொடிசியா நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள கோவிட் 19 பெருந்தொற்று இரண்டாம் அலையால், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முழுமையாக மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ளன.எதிர்வரும் 6 மாதங்களில் உற்பத்தி சார்ந்த செயல்பாடுகள் வெகுவாக குறைய வாய்ப்புகள் உள்ளன.
இந்தியா முழுவதும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளின் உற்பத்தி, போக்குவரத்து உள்ளிட்ட பல செயல்பாடுகளும் கடமையாக பாதிக்கப்பட்டிருப்பதோடு, விற்பனையும் நேரடியாக பாதிக்கப்பட்டு, நிதிப் பற்றாக்குறைக்கு வழிவகுத்திருக்கிறது. வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை சரியாக செலுத்த இயலாமல் போவதற்கும் இது காரணமாக அமைகிறது. மூலப்பொருட்கள் 70% வரை அசாதாரணமாக விலை உயர்ந்ததும் இந்த கடுமையான நிதி பற்றாக் குறைக்கு காரணம் ஆகும்.
மேற்சொன்ன காரணங்கள் காரணமாக முன்பு அளிக்கப்பட்ட 20% கடன் உதவி தொகையை முழுவதும் காணாமல் செய்துவிட்டன. அந்த வகையில், இந்த இரண்டாம் அலை நோய்ப் பரவலில் இருந்து விடுபட, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தொழிற்சாலைகள் செலுத்த வேண்டிய கடன் தொகைகள் மற்றும் அதற்கான வட்டி தொகை ஆகியவற்றுக்கு 6 மாத கால கடன் விடுப்புக் காலம் அளிக்கப்பட வேண்டும்.
தற்போது உள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் வகையில் தொழிற்சாலைகளுக்கு அவற்றின் நடப்பு மூலதன கடன் அல்லது ரொக்கக் கடன் வசதி ஆகியவற்றில் கூடுதலாக 20% கடனுதவியை எந்த நிபந்தனையும் இல்லாமல் வங்கிகளும், வங்கிசாரா நிதி நிறுவனங்களும் வழங்க வேண்டும். இரண்டு வருட கால கடன் விடுப்பு காலத்திற்கு பிறகு இந்த கூடுதல் கடன் தொகையை திருப்பி செலுத்தும் காலத்தை 6 ஆண்டுகளாக நிர்ணயிக்க வேண்டும். தற்போது உள்ள சூழலை கவனத்தில் கொண்டு இயங்காச் சொத்து நடைமுறைகள் குறித்த தளர்வுகள் வரும் 31.03.2022 வரை நீட்டிக்கப்பட வேண்டும்.
வங்கிகளிடமிருந்து சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் கடன் தொகையைச் செலுத்துமாறு கடுமையான அழுத்தம் தரப்படுகிறது. இந்த சிக்கலான சூழ்நிலையில் மத்திய நிதியமைச்சர் தலையிட்டு சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கு வங்கிகள் அளிக்கும் நெருக்கடியை தடுத்து உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு கொடிசியா கேட்டுக்கொண்டுள்ளது.