கோவை: மத்திய சுற்றுச்சூழல் துறை சார்பில் மறைந்த நடிகர் விவேக் நினைவாக தபால் தலை வெளியிட திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.
கோவை: மத்திய சுற்றுச்சூழல் துறை சார்பில் மறைந்த நடிகர் விவேக் நினைவாக தபால் தலை வெளியிட திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக நகைச்சுவை நடிகர் விவேக் தன்னுடைய படங்களில் நகைச்சுவை மூலம் சமூக கருத்துக்களை கூறி வந்தார். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வழிகாட்டுதலின்படி ஒரு கோடி மரக்கன்றுகளை நட திட்டமிட்டார். கிரீன் கலாம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பூமி வெப்பமயமாதலை தடுக்க மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக்கொண்டு இதுவரை அவர் 35 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் திடீரென மரணம் அடைந்தார். இது திரை உலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் சமூக அக்கறை கொண்டவராக நடிகர் விவேக் திகழ்ந்தார். இயற்கையை நேசித்த இயற்கையின் பாதுகாவலராக விளங்கிய நடிகர் விவேக்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக மத்திய அரசு சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பிரதமர் மோடியுடன் ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது விவேக் படம் போட்ட தபால் தலை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக அடுத்த மாதம் முதல் வாரத்தில் தபால்தலை வெளியிடலாம் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக நகைச்சுவை நடிகர் விவேக் தன்னுடைய படங்களில் நகைச்சுவை மூலம் சமூக கருத்துக்களை கூறி வந்தார். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வழிகாட்டுதலின்படி ஒரு கோடி மரக்கன்றுகளை நட திட்டமிட்டார். கிரீன் கலாம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பூமி வெப்பமயமாதலை தடுக்க மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக்கொண்டு இதுவரை அவர் 35 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் திடீரென மரணம் அடைந்தார். இது திரை உலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் சமூக அக்கறை கொண்டவராக நடிகர் விவேக் திகழ்ந்தார். இயற்கையை நேசித்த இயற்கையின் பாதுகாவலராக விளங்கிய நடிகர் விவேக்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக மத்திய அரசு சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பிரதமர் மோடியுடன் ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது விவேக் படம் போட்ட தபால் தலை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக அடுத்த மாதம் முதல் வாரத்தில் தபால்தலை வெளியிடலாம் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.