உடுமலைப்பேட்டை: உடுமலைப்பேட்டை அரசு கலைக்கல்லூரியில் கொரோனா சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது.
உடுமலைப்பேட்டை: உடுமலைப்பேட்டை அரசு கலைக்கல்லூரியில் கொரோனா சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் முதலாவது அலையின்போது உடுமலைப்பேட்டை அரசு கலைக்கல்லூரியில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதிதாக 100 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையமாகவும் கல்லூரி மாற்றப்பட்டது. ஆனால் முதல் அலையின் போது உடுமலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட அரசு மருத்துவமனை, திருப்பூர் அரசு மருத்துவமனை, கோவை இஎஸ்ஐ மருத்துவமனை ஆகியவற்றில்தான் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனால் உடுமலை அரசு கலைக்கல்லூரி சிறப்பு சிகிச்சை மையம் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் இம்முறை கொரோனா தொற்று நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் படுக்கைகள் போதவில்லை. எனவே, இன்று முதல் உடுமலைப்பேட்டை அரசு கலைக்கல்லூரியில் உள்ள சிறப்பு முகாமில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.