கோவை: கோவையில் ஃபுல் மூன் எக்ஸ்போர்ட்ஸ் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் தங்க நாணய ஏடிஎம் திறக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் ஃபுல் மூன் எக்ஸ்போர்ட்ஸ் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் தங்க நாணய ஏடிஎம் திறக்கப்பட்டுள்ளது.

கோவை கிராஸ் கட் சாலையில் சிங்கப்பூர் பிளாசாவில் தங்க நாணய ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. கோவை ஃபுல் மூன் எக்ஸ்போர்ட்ஸ் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் இந்த ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம் வாயிலாக பெறும் தங்க நாணயங்களில் க்யூ ஆர் கோடு பொறிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த நாணயங்களை பிற்காலத்தில் விற்கும் போது அதில் உள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து அந்த நாணயம் வாங்கிய நாள் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்
இது குறித்துப் பேசிய சீனிவாசன் (ஃபுல் மூன் நிறுவன சங்கம்) “24 மணி நேர தங்க நாணய ஏடிஎம் மூலம் 1கி, 2கி, 4கி, 8 கி என்ற விதங்களில் தங்க நாணயங்களை பெற்று கொள்ளலாம். இதற்கான பணத்தை இயந்திரத்தில் பணமாக அல்லது யுபிஐ மூலம் செலுத்தி கொள்ளலாம்.

இந்த நாணயங்களுக்கு 916 சான்றிதழ் தந்துள்ளோம். ரசீதும் கிடைக்கும். கொரோனா காலம் என்பதால் நகை கடைகளுக்கு செல்வதை குறைக்கவே இந்த இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

ரொக்கமாக நகைக்கடைகளில் 2 லட்சம் வரை மட்டுமே செலுத்தி நாணயம் வாங்க முடியும். யுபிஐ செயலி வாயிலாக ஏடிஎம் மூலம் எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் நாணயங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் இந்தியாவில் இது போன்ற ஏடிஎம் இது தான் முதல் முறை. இதனை பல்வேறு இடங்களுக்கு விரிவு படுத்த திட்டமிட்டுள்ளோம்,” என்று தெரிவித்தார்.
கோவை கிராஸ் கட் சாலையில் சிங்கப்பூர் பிளாசாவில் தங்க நாணய ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. கோவை ஃபுல் மூன் எக்ஸ்போர்ட்ஸ் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் இந்த ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம் வாயிலாக பெறும் தங்க நாணயங்களில் க்யூ ஆர் கோடு பொறிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த நாணயங்களை பிற்காலத்தில் விற்கும் போது அதில் உள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து அந்த நாணயம் வாங்கிய நாள் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்
இது குறித்துப் பேசிய சீனிவாசன் (ஃபுல் மூன் நிறுவன சங்கம்) “24 மணி நேர தங்க நாணய ஏடிஎம் மூலம் 1கி, 2கி, 4கி, 8 கி என்ற விதங்களில் தங்க நாணயங்களை பெற்று கொள்ளலாம். இதற்கான பணத்தை இயந்திரத்தில் பணமாக அல்லது யுபிஐ மூலம் செலுத்தி கொள்ளலாம்.
இந்த நாணயங்களுக்கு 916 சான்றிதழ் தந்துள்ளோம். ரசீதும் கிடைக்கும். கொரோனா காலம் என்பதால் நகை கடைகளுக்கு செல்வதை குறைக்கவே இந்த இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
ரொக்கமாக நகைக்கடைகளில் 2 லட்சம் வரை மட்டுமே செலுத்தி நாணயம் வாங்க முடியும். யுபிஐ செயலி வாயிலாக ஏடிஎம் மூலம் எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் நாணயங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் இந்தியாவில் இது போன்ற ஏடிஎம் இது தான் முதல் முறை. இதனை பல்வேறு இடங்களுக்கு விரிவு படுத்த திட்டமிட்டுள்ளோம்,” என்று தெரிவித்தார்.