பல்லடத்தில் இரு பெண் குழந்தைகளுக்கு எலி மருந்து கொடுத்து கொன்று தாயும் தற்கொலை முயற்சி..!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் குடும்பத் தகராறு காரணமாக ஒரு தாய், தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் எலி மருந்து கொடுத்து கொன்றுவிட்டு தானும் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் குடும்பத் தகராறு காரணமாக ஒரு தாய், தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் எலி மருந்து கொடுத்து கொன்றுவிட்டு தானும் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது குப்புசாமி நாயுடுபுரம். இப்பகுதியில் வசித்து வருபவர் தமிழ்ச் செல்வி. இவருக்கும் பிரபு என்பவருக்கும் திருமணமாகி பிருந்தா (வயது 7), பிரசந்தா (வயது 4) என்கிற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக கணவர் பிரபுவை பிரிந்து தமிழ்ச் செல்வி தனது குடும்பத்தாருடன் குப்புசாமி நாயுடுபுரத்தில் வசித்து வந்தார். இந்தநிலையில் தமிழ்ச் செல்வியின் வீட்டார் பிரபுவுடன் சேர்ந்து வாழ பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். இதற்கு தமிழ்ச் செல்வி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், பெற்றோர்களின் வற்புறுத்தல் காரணமாக மனமுடைந்து நேற்று முன் தினம் தமிழரசி தனது இரு குழந்தைகளுக்கும் எலி மருந்தை கொடுத்துவிட்டு தானும் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஆனால், தற்கொலை முயற்சி தோல்வியடைந்ததால் நேற்று மறுபடியும் எலி மருந்தை அளவுக்கதிகமாகக் குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு தானும் உட்கொண்டுள்ளார். இந்தநிலையில், பிருந்தா மற்றும் பிரசந்தா ஆகிய இரு குழந்தைகளுடன் தமிழ்ச் செல்வியும் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்ட குடும்பத்தினர் விசாரித்தபோதுதான் எலி மருந்தை உட்கொண்டது தெரியவந்தது. இதனை அடுத்து மூவரையும் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்று சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் பிருந்தா மற்றும் பிரசந்தா ஆகிய இரு குழந்தைகளும் ஒன்றன்பின் ஒன்றாக இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தமிழ்ச் செல்வி சிகிச்சை பெற்று வரும் நிலையில், பல்லடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்தகராறில் ஒன்றுமறியாத அப்பாவி குழந்தைகளைப் பெற்ற தாயே கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...