பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்... கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது..!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 4.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை போலீஸார் கைது செய்து வழக்குப் பதிந்து உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 4.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை போலீஸார் கைது செய்து வழக்குப் பதிந்து உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஆனைமலை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று நள்ளிரவு ஆனைமலை பெரிய பள்ளிவாசல் அருகே போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த டெம்போவில் சோதனை செய்தனர். அதில் சுமார் 4.5 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக, ஆனைமலை காந்தி நகரைச் சேர்ந்த ரபீக்(39), பொள்ளாச்சி கண்ணப்பன் நகரைச் சேர்ந்த முகமது ரபீக்(29), ஆனைமலையைச் சேர்ந்த பகீப்புள்ளா(44) ஆகியோரைப் பிடித்து ஆனைமலை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



மேலும், கடத்த முயற்சித்த சுமார் 4.5 டன் ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய டெம்போ மற்றும் மூன்று இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பொள்ளாச்சியில் பறிமுதல் செய்த போலீஸார், வழக்கை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...