வால்பாறை: வால்பாறை ஸ்டான் மோர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பயன்பாட்டுக்கு வராத படகு குழாமில் கழிவு தேங்கி உள்ளது. அதிலிருந்து வீசும் துர் நாற்றத்தால் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வால்பாறை: வால்பாறை ஸ்டான் மோர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பயன்பாட்டுக்கு வராத படகு குழாமில் கழிவு தேங்கி உள்ளது. அதிலிருந்து வீசும் துர் நாற்றத்தால் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி சார்பில் ஸ்டான் மோர் சாலையில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. அவசரகதியில் தொடங்கப்பட்டு, இதுவரை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இந்தநிலையில் வால்பாறை நகர், காமராஜ் நகர், காந்தி நகர், புது மார்க்கெட், கக்கன் காலனி மற்றும் சிறுவர் பூங்கா ஆகிய பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர்கள், குப்பைகள் படகு குழாமில் வந்து சேர்கிறது.

காமராஜ் நகர் வழியாக வரும் ஆற்றை மறித்து இந்தப் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆற்றில் வரும் கழிவுநீர் குப்பைகள் அனைத்தும் படகு குழாமில் சேருகிறது. மேலும், படகு இல்லத்திற்காக ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளதால், சிறுவர் பூங்கா வரை கழிவு நீர் தேங்கி நிற்கின்றது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, படகு குழாமில் தேக்கி வைக்கப்பட்டுள்ள கழிவுநீரை வெளியேற்றிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். அதோடு, படகு குழாமை சுத்தப்படுத்தி பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்றும் கோருகிறார்கள்.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி சார்பில் ஸ்டான் மோர் சாலையில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. அவசரகதியில் தொடங்கப்பட்டு, இதுவரை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இந்தநிலையில் வால்பாறை நகர், காமராஜ் நகர், காந்தி நகர், புது மார்க்கெட், கக்கன் காலனி மற்றும் சிறுவர் பூங்கா ஆகிய பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர்கள், குப்பைகள் படகு குழாமில் வந்து சேர்கிறது.
காமராஜ் நகர் வழியாக வரும் ஆற்றை மறித்து இந்தப் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆற்றில் வரும் கழிவுநீர் குப்பைகள் அனைத்தும் படகு குழாமில் சேருகிறது. மேலும், படகு இல்லத்திற்காக ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளதால், சிறுவர் பூங்கா வரை கழிவு நீர் தேங்கி நிற்கின்றது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, படகு குழாமில் தேக்கி வைக்கப்பட்டுள்ள கழிவுநீரை வெளியேற்றிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். அதோடு, படகு குழாமை சுத்தப்படுத்தி பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்றும் கோருகிறார்கள்.