கோவை: கேரளாவைச் சேர்ந்த மலையாளத் திரைப்பட நடிகை சரிதா நாயருக்கு, கோழிக்கோடு நீதிமன்றம், சோலார் பேனல் மோசடி வழக்கில் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
கோவை: கேரளாவைச் சேர்ந்த மலையாளத் திரைப்பட நடிகை சரிதா நாயருக்கு, கோழிக்கோடு நீதிமன்றம், சோலார் பேனல் மோசடி வழக்கில் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் கோழிக்கோடு ஆகிய நகரங்களில் சோலார் சிஸ்டம் என்ற பெயரில் சூரிய மின் உற்பத்தி தகடுகள் சோலார் பேனல் அமைக்கும் நிறுவனத்தை நடிகை சரிதா நாயர் நடத்தி வந்தார். கடந்த 2012 ல் கோழிக்கோடைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்பவர், போலீஸில் அளித்த புகாரில் சோலார் பேனல் வசதி செய்து தருவதாக கூறி, 42.70 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக சரிதா நாயர், அவரது கூட்டாளி பிஜு ராதாகிருஷ்ணன் பெயரை கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணை, கோழிக்கோடு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.குற்றம் சாட்டப்பட்ட சரிதா நாயர், நீதிமன்றம் பலமுறை, 'சம்மன்' அனுப்பியும் ஆஜராகவில்லை.
இந்தநிலையில், அவரை கைது செய்ய, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவரை சமீபத்தில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வெளியானது, இரண்டாவது குற்றவாளியான சரிதா நாயருக்கு, ஆறு ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முதல் குற்றவாளி பிஜு ராதாகிருஷ்ணன், கொரோனா தொற்று காரணமாக, தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவருக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் கோழிக்கோடு ஆகிய நகரங்களில் சோலார் சிஸ்டம் என்ற பெயரில் சூரிய மின் உற்பத்தி தகடுகள் சோலார் பேனல் அமைக்கும் நிறுவனத்தை நடிகை சரிதா நாயர் நடத்தி வந்தார். கடந்த 2012 ல் கோழிக்கோடைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்பவர், போலீஸில் அளித்த புகாரில் சோலார் பேனல் வசதி செய்து தருவதாக கூறி, 42.70 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக சரிதா நாயர், அவரது கூட்டாளி பிஜு ராதாகிருஷ்ணன் பெயரை கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணை, கோழிக்கோடு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.குற்றம் சாட்டப்பட்ட சரிதா நாயர், நீதிமன்றம் பலமுறை, 'சம்மன்' அனுப்பியும் ஆஜராகவில்லை.
இந்தநிலையில், அவரை கைது செய்ய, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவரை சமீபத்தில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வெளியானது, இரண்டாவது குற்றவாளியான சரிதா நாயருக்கு, ஆறு ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முதல் குற்றவாளி பிஜு ராதாகிருஷ்ணன், கொரோனா தொற்று காரணமாக, தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவருக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.