கோவையில் தர்பூசணி பழம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை!

கோவை: கோவையில் தர்பூசணி பழம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


கோவை: கோவையில் தர்பூசணி பழம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, சின்னட்டியுர், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, ஆதி மதியனூர், கண்டியூர், மத்தம்பாளையம், ஆலாங்கொம்பு ஆகிய பகுதிகளில் விவசாயிகள் தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக தர்பூசணி பழங்களுக்கு உரிய விலை கிடைக்க பெறாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய சின்னட்டியுர் பகுதியை சேர்ந்த தர்பூசணி விவசாயி பிரகாஷ், “கோடை காலத்தில் அறுவடை செய்யும் வகையில் ஒன்றரை மாதத்துக்கு முன்பே தர்பூசணி பயிரிட்டோம். தற்போது தர்பூசணிகள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் விலை மிகவும் சரிந்துள்ளது.

எனவே, தர்பூசணி பழங்களை கொள்முதல் செய்ய ஆட்கள் இல்லாத காரணத்தினால் செடியிலேயே தர்பூசணி பழங்கள் அழுகி போகும் நிலையில் உள்ளன. ஒரு சிலர் கொள்முதல் செய்ய வந்தாலும் குறைந்த விலைக்கு கேட்கின்றனர். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தர்பூசணி பழங்கள் கொள்முதல் விலை கிலோவுக்கு 20 ரூபாய் ஆக இருந்தது.

இப்போது தர்பூசணி கிலோ ஒன்றுக்கு ரூ. 6 மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். இப்போது விற்கும் கொள்முதல் விலையை விட அதிக அளவு பணம் செலவழித்து உள்ளோம்,” என்றார். கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் கொள்முதல் செய்யமுன்வருவதில்லை. தர்பூசணிக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...