கோவை: தோட்டக்கலைத் துறை மூலமாக சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுவதாகவும் அதற்காக விண்ணப்பிப்பதற்கு விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
கோவை: தோட்டக்கலைத் துறை மூலமாக சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுவதாகவும் அதற்காக விண்ணப்பிப்பதற்கு விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
தோட்டக்கலைத் துறை மூலமாக சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்படுவது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தோட்டக்கலைத் துறையின் மூலம் நுண்நீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசன அமைப்பு நிறுவன சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகிதம் மானியமும் வழங்கப்படுகிறது.
சிறு குறு விவசாயிகள் அதிகபட்சம் 2 ஹெக்டேர் வரையிலும் இதர விவசாயிகள் 5 ஏக்கர் வரையிலும் பயன்பெறலாம். நுண்ணீர் பாசனம் அமைக்க குழி எடுப்பதற்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய் 3,000 மானியம் வழங்கப்படுகிறது. நுண்ணீர் பாசனம் அமைக்க முன் வரும் விவசாயிகளுக்கு துணைநிலை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் பாசன நீர் குழாய்கள் ஒரு ஹெக்டேருக்கு ரூபாய் 10,000 நீரை இறைப்பது ஆயில் என்ஜின் மின் மோட்டார் அமைக்க ரூபாய் 15,000 மற்றும் தரை நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்க ரூபாய் 40 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா அடங்கல், சிறு குறு விவசாயிகளுக்கான சான்று நிலவரைபடம் மண் மற்றும் நீர் பரிசோதனை அறிக்கை குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், விண்ணப்பதாரரின் புகைப்படம், வட்டாட்சியரால் வழங்கப்பட்ட அனுபோக சான்று ஆகிய ஆவணங்களை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தோட்டக்கலைத் துறை மூலமாக சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்படுவது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தோட்டக்கலைத் துறையின் மூலம் நுண்நீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசன அமைப்பு நிறுவன சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகிதம் மானியமும் வழங்கப்படுகிறது.
சிறு குறு விவசாயிகள் அதிகபட்சம் 2 ஹெக்டேர் வரையிலும் இதர விவசாயிகள் 5 ஏக்கர் வரையிலும் பயன்பெறலாம். நுண்ணீர் பாசனம் அமைக்க குழி எடுப்பதற்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய் 3,000 மானியம் வழங்கப்படுகிறது. நுண்ணீர் பாசனம் அமைக்க முன் வரும் விவசாயிகளுக்கு துணைநிலை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் பாசன நீர் குழாய்கள் ஒரு ஹெக்டேருக்கு ரூபாய் 10,000 நீரை இறைப்பது ஆயில் என்ஜின் மின் மோட்டார் அமைக்க ரூபாய் 15,000 மற்றும் தரை நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்க ரூபாய் 40 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா அடங்கல், சிறு குறு விவசாயிகளுக்கான சான்று நிலவரைபடம் மண் மற்றும் நீர் பரிசோதனை அறிக்கை குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், விண்ணப்பதாரரின் புகைப்படம், வட்டாட்சியரால் வழங்கப்பட்ட அனுபோக சான்று ஆகிய ஆவணங்களை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.