வாக்கு எண்ணிக்கையின்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்... தமிழகத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது..!

கோவை மே 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்தநிலையில் தமிழகத் தேர்தல் ஆணையம் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


கோவை: மே 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்தநிலையில் தமிழகத் தேர்தல் ஆணையம் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தமிழகத்தில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளநிலையில், தேர்தல் ஆணையம் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தநிலையில் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அவைகள் வருமாறு:-

வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றுவதை மாவட்டத் தேர்தல் அதிகாரி உறுதி செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் கொரோனா பரிசோதனை செய்து, அதில் தொற்று இல்லை என்பதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும். அல்லது 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் அலுவலர்கள், வேட்பாளர்கள், முகவர்களின் பட்டியலை மூன்று நாட்களுக்கு முன்னதாக தயார் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போது, மையத்திற்கு வெளியே பொதுமக்கள் கூட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளை வைத்து முறையான திட்டத்தை உருவாக்க மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையம் எச்சரித்துள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...