ஏலச்சீட்டு நடத்தி ஏமாற்றியவர்கள் தலைமறைவு... போத்தனூர் போலீஸ் தேடுதல் வேட்டை..!

கோவை போத்தனூரில் தந்தை, மகன் மற்றும் நண்பர் கூட்டுச் சேர்ந்து சீட்டு நிறுவனம் நடத்தி ஏமாற்றிவிட்டு தலைமறைவாகியுள்ளனர். வாடிக்கையாளர்களின் புகாரைத் தொடர்ந்து போத்தனூர் போலீஸார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வலைவீசித் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை போத்தனூரில் தந்தை, மகன் மற்றும் நண்பர் கூட்டுச் சேர்ந்து சீட்டு நிறுவனம் நடத்தி ஏமாற்றிவிட்டு தலைமறைவாகியுள்ளனர். வாடிக்கையாளர்களின் புகாரைத் தொடர்ந்து போத்தனூர் போலீஸார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வலைவீசித் தேடி வருகின்றனர்.

கோவை போத்தனூரில் ரொனால்டு ரீகன் டேவிட் அவரது தந்தை டேவிட் சாமுவேல் இவர்களது நண்பர் ராஜேந்திரன் ஆகியோர் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தனர். மாதாந்திர சீட்டு நடத்தி பலரிடம் பணம் வசூல் செய்தனர். குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த அன்சாரி வயது 34, இவர்களது சீட்டு நிறுவனத்தில் சேர்ந்து ரூபாய் 5 லட்சம் செலுத்தி உள்ளார். ஆனால், முதிர்வுத் தொகையை தராமல் சீட்டு நிறுவனத்தினர் காலம் கடத்தி வந்தனர்.

இந்தநிலையில், சீட்டு நிறுவனத்தை மூடிவிட்டு மூவரும் தலைமறைவாகினர். இதுகுறித்து போத்தனூர் போலீஸாரிடம் அன்சாரி புகார் செய்தார். விசாரணையில் 68 பேரிடம் ரூபாய் 70 லட்சத்து 61 ஆயிரம் மோசடி செய்திருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கை கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. மூன்று பேர் மீதும் கூட்டு சதி, ஏமாற்றுதல், தொழிலாளர் பாதுகாப்பு நலச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருக்கும் சம்பந்தப்பட்ட மூன்று பேரையும் போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...