பொள்ளாச்சியில் பல்வேறு வழிப்பறி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் மூன்று லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்து மீட்கப்பட்டன.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பல்வேறு வழிப்பறி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் மூன்று லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்து மீட்கப்பட்டன.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் செல்லும் மர்மநபர்கள் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவதும், மற்றும் வீடுகளில் நகைகளை கொள்ளையடித்து செல்லும் சம்பவங்களும் நடைபெற்று வந்தன. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரை அடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க கிழக்கு காவல் நிலைய போலீஸார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

இந்தநிலையில், நேற்று தெப்பக்குளம் அருகே போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த மூன்று பேரை நிறுத்தி விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். பின்னர் அவர்களிடம் மூன்று லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அதை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துச்சாமி(25), பிரகாஷ்(22) மற்றும் பொள்ளாச்சியைச் சேர்ந்த சங்கரபரணி(37) உள்ளிட்ட அந்த மூன்று பேரையும் போலீஸார் கைது செய்து விசாரித்தபோது, இவர்கள் பல்வேறு வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் செல்லும் மர்மநபர்கள் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவதும், மற்றும் வீடுகளில் நகைகளை கொள்ளையடித்து செல்லும் சம்பவங்களும் நடைபெற்று வந்தன. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரை அடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க கிழக்கு காவல் நிலைய போலீஸார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இந்தநிலையில், நேற்று தெப்பக்குளம் அருகே போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த மூன்று பேரை நிறுத்தி விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். பின்னர் அவர்களிடம் மூன்று லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அதை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துச்சாமி(25), பிரகாஷ்(22) மற்றும் பொள்ளாச்சியைச் சேர்ந்த சங்கரபரணி(37) உள்ளிட்ட அந்த மூன்று பேரையும் போலீஸார் கைது செய்து விசாரித்தபோது, இவர்கள் பல்வேறு வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.