நீலகிரி: குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்ட் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அலுவலர் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
நீலகிரி: குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்ட் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அலுவலர் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்ட் அலுவலகத்தில் 15 க்கும் மேற்பட்ட அலுவலர்களும், 300 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த அலுவலகம் மத்திய பாதுகாப்பு துறைக்கு கீழ் இயங்கி வருகிறது. இங்குள்ள 7 வார்டுகளில் பொது மக்களும், மீதமுள்ள பகுதிகளில் ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் குடியிருப்பு உள்ளது. இந்த அலுவலகத்தில் சொத்து வரி, குடிநீர், பிறப்பு இறப்பு சான்று உட்பட பல பணிகளுக்காக பொதுமக்கள் வந்து செல்வர்.
இந்நிலையில் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் அலுவலர், 2 ஆண் அலுவலர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அலுவலகத்தை தற்காலிகமாக மூட முதன்மை அதிகாரி பூஜா பலிச்சா உத்தரவிட்டார். இங்கு பணிபுரியும் பலரிடம் இருந்து மாதிரிகள் எடுத்து செல்லப்பட்டுள்ளன.
அந்த மாதிரிகளின் முடிவுகள் வரும் வரை அலுவலகம் தற்காலிகமாக மூடப்படும் என்றும் அதன் பின்னர் திறப்பது குறித்து உயர் அதிகாரி, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை பேரில் முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு துறைக்கு கீழ் செயல்படும்வெலிங்டன் கண்டோன்மென்ட் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்ட் அலுவலகத்தில் 15 க்கும் மேற்பட்ட அலுவலர்களும், 300 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த அலுவலகம் மத்திய பாதுகாப்பு துறைக்கு கீழ் இயங்கி வருகிறது. இங்குள்ள 7 வார்டுகளில் பொது மக்களும், மீதமுள்ள பகுதிகளில் ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் குடியிருப்பு உள்ளது. இந்த அலுவலகத்தில் சொத்து வரி, குடிநீர், பிறப்பு இறப்பு சான்று உட்பட பல பணிகளுக்காக பொதுமக்கள் வந்து செல்வர்.
இந்நிலையில் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் அலுவலர், 2 ஆண் அலுவலர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அலுவலகத்தை தற்காலிகமாக மூட முதன்மை அதிகாரி பூஜா பலிச்சா உத்தரவிட்டார். இங்கு பணிபுரியும் பலரிடம் இருந்து மாதிரிகள் எடுத்து செல்லப்பட்டுள்ளன.
அந்த மாதிரிகளின் முடிவுகள் வரும் வரை அலுவலகம் தற்காலிகமாக மூடப்படும் என்றும் அதன் பின்னர் திறப்பது குறித்து உயர் அதிகாரி, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை பேரில் முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு துறைக்கு கீழ் செயல்படும்வெலிங்டன் கண்டோன்மென்ட் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.