பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இன்று 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இன்று 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகசுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பொள்ளாச்சி நகர் பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று பரவல் தினமும் அதிகரிக்கிறது. சுகாதாரத்துறையினர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றனர்.
இன்று பொள்ளாச்சி நகராட்சியில் 26 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 26 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 16 பேருக்கும் என மொத்தம் 68 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் தொற்று உறுதி செய்யப்பட்ட இடங்களில் சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
பொள்ளாச்சி நகர் பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று பரவல் தினமும் அதிகரிக்கிறது. சுகாதாரத்துறையினர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றனர்.
இன்று பொள்ளாச்சி நகராட்சியில் 26 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 26 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 16 பேருக்கும் என மொத்தம் 68 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் தொற்று உறுதி செய்யப்பட்ட இடங்களில் சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.