கோவை: கோவையில் வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கு நாளை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கோவை: கோவையில் வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கு நாளை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த 6ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணும் பணி வருகிற மே 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணும் பணிகளுக்கான இறுதி கட்ட ஏற்பாடுகளில்மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை பரவல் காரணமாக வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவையில் வாக்கு எண்ணும் மையங்களில் பணியில் ஈடுபடுத்தப்படஉள்ள அலுவலர்களுக்கு நாளை கொரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
தேர்தல் அலுவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு மாற்றாக துணை தேர்தல் அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படஉள்ளனர். இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,”வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு வரும் 29-ம்தேதி கொரோனா தொற்றுப் பரிசோதனை எடுக்கப்படும்.
வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு ஒருவேளை தொற்று உறுதி செய்யப்பட்டால், மாற்று அலுவலர்கள் பணியில் ஈடுபடுவார்கள். இதற்காக மாற்று அலுவலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். எனவே தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் எவ்வித குழப்பமும் இன்றி வாக்கு எண்ணிக்கை உரிய முறையில் நடத்தப்பட உள்ளது” என்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த 6ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணும் பணி வருகிற மே 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணும் பணிகளுக்கான இறுதி கட்ட ஏற்பாடுகளில்மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை பரவல் காரணமாக வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவையில் வாக்கு எண்ணும் மையங்களில் பணியில் ஈடுபடுத்தப்படஉள்ள அலுவலர்களுக்கு நாளை கொரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
தேர்தல் அலுவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு மாற்றாக துணை தேர்தல் அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படஉள்ளனர். இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,”வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு வரும் 29-ம்தேதி கொரோனா தொற்றுப் பரிசோதனை எடுக்கப்படும்.
வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு ஒருவேளை தொற்று உறுதி செய்யப்பட்டால், மாற்று அலுவலர்கள் பணியில் ஈடுபடுவார்கள். இதற்காக மாற்று அலுவலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். எனவே தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் எவ்வித குழப்பமும் இன்றி வாக்கு எண்ணிக்கை உரிய முறையில் நடத்தப்பட உள்ளது” என்றனர்.