காங்கேயம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு..!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராகக் களம் இறங்கியவர், வெற்றி பெற்றதாக பழையகோட்டை ஊராட்சியில் வைக்கப்பட்ட பேனரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொர்ந்து சிறிது நேரத்தில் பேனர் அகற்றப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராகக் களம் இறங்கியவர், வெற்றி பெற்றதாக பழையகோட்டை ஊராட்சியில் வைக்கப்பட்ட பேனரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொர்ந்து சிறிது நேரத்தில் பேனர் அகற்றப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதனும், அதிமுக சார்பில் ஏ.எஸ்.ராமலிங்கம் என்கிற முருகவேலும் வேட்பாளர்களாக நிற்கின்றனர். இந்தநிலையில், அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச்செய்த வாக்காளர்களுக்கு நன்றி என காங்கேயம் தொகுதிக்குட்பட்ட பழையகோட்டை எனும் பகுதியில் அதிமுக உறுப்பினர்களால் பேனர் வைக்கப்பட்டது. அந்த பேனரில், 13,483 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக வேட்பாளர் ஏ.எஸ்.ராமலிங்கம் கவனத்திற்கு கொண்டு செல்லுப்பட்டது. உடனடியாக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேனரை அகற்றகோரியதுடன், அவருடைய முகநூல் பக்கத்திலும் தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார். அதில், இதுபோன்ற சம்பவங்கள் தேர்தல் விதிகளுக்கு எதிரானது என்றும், கட்சியின் கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளார். பேனர் வைத்த சில மணி நேரங்களில் அவை அகற்றபட்டது, ஆனால், வாக்கு வித்தியாசம் முதற்கொண்டு இடம்பெற்றது பல்வேறு கேள்விகளுக்கு இடம் அளித்துள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...