வீர கேரளத்தில் நண்பனை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்..!

கோவை: கோவை அருகே உள்ள வீர கேரளத்தில் நண்பனை அடித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளான இருவரை கைது செய்த போலீஸார், மேலும், சம்பந்தப்பட்ட மூன்று பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை அருகே உள்ள வீர கேரளத்தில் நண்பனை அடித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளான இருவரை கைது செய்த போலீஸார், மேலும், சம்பந்தப்பட்ட மூன்று பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

வீரகேரளம் டாஸ்மாக் மதுக்கடை அருகில் உள்ள மைதானத்தில் கடந்த 24-ஆம் தேதி மர்மமான முறையில் ஓர் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. வடவள்ளி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் இறந்தவர் வீர கேரளத்தைச் சேர்ந்த தர்மலிங்கம்(45), பெயிண்டர் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘கடந்த 24ஆம் தேதி தர்மலிங்கத்தின் நண்பனான முல்லை நகரைச் சேர்ந்த பிரபு(28) மற்றும் பேரூர் செட்டிபாளையம்தைச் சேர்ந்த முத்துக்குமார்(29), ஆகிய இருவரும் தர்மலிங்கத்தினை அழைத்துச் சென்றுள்ளனர். பிரபு மற்றும் முத்துக்குமார் பிடித்து விசாரித்ததில் 23ஆம் தேதி தர்மலிங்கம் அவரது நண்பர்களான பிரபு, முத்துக்குமார், காளி, ஜெயா, நந்தா ஆகியோர் சுகர் கேன் இன்ஸ்டியூட் அருகில் உள்ள வீட்டில் மது அருந்தியது தெரியவந்தது. சிறிது நேரம் கழித்து காளியிடம் இருந்த 3 கிராம் தங்கம் காணாமல் போனது. தர்மலிங்கம் அங்கிருந்து யாரிடமும் கூறாமல் வீட்டுக்கு சென்று உள்ளார். இதனால் அவர்தான் தங்கத்தை எடுத்துச் சென்று இருப்பார் என சந்தேகப்பட்டு உள்ளனர்.

இதையடுத்து மறுநாள் தர்மலிங்கத்தினை அழைத்துச் சென்று மது அருந்திய இடத்தில் வைத்து ஐந்து பேரும் இணைந்து தர்மலிங்கத்தை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அதன் பின் 5 பேரும் தர்மலிங்கத்தை அழைத்துக்கொண்டு வீரகேரளம் டாஸ்மாக் மதுக்கடை அருகே உள்ள மயானத்துக்குச் சென்று மது அருந்தியுள்ளனர். அப்போது தர்மலிங்கம் உயிரிழந்துள்ளார். உடலை விட்டுவிட்டு ஐந்து பேரும் தப்பிச் சென்றுள்ளனர்.'' என்று தெரிவித்தனர். இந்தக் கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார் பிரபு மற்றும் முத்துக்குமாரை கைது செய்தனர் மேலும் மூவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...