கூடுதல் ஆட்களை நியமிக்க கோரி கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்...!

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளிக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் ஆட்களை நியமிக்கக்கோரி செவிலியர்கள் மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளிக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் ஆட்களை நியமிக்கக்கோரி செவிலியர்கள் மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளையில், அரசு மருத்துவமனைகளில் ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் கூறப்படுகிறது. கோவை அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான செவிலியர்கள் கொரோனா வார்டில் பணிபுரிவதால், இதர நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டுகளில் போதுமான எண்ணிக்கையில் செவிலியர்கள் இல்லாததால், தற்போது பணியாற்றி வரும் செவிலியர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.



எனவே, கூடுதல் செவிலியர்களை நியமனம் செய்து பற்றாக்குறையைப் போக்க வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள செவிலியர்கள் குவார்டர்ஸ் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்களை நியமனம் செய்து தற்போது பணிபுரியும் செவிலியர்களின் பணிச்சுமையை குறைக்கும்படி முழக்கங்களை எழுப்பினர்.



இதனைத் தொடர்ந்து அங்கு வந்த மருத்துவமனை முதல்வரிடம் அவர்களது கோரிக்கையை முன்வைத்தனர். தங்களது கோரிக்கைகள் அரசு கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்று முதல்வர் உறுதியளித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...