வால்பாறையில் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு.... குடிநீர் விநியோகம் பாதிப்பு..!

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு உண்டாகியுள்ளது. இதனை உடனடியாக சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு உண்டாகியுள்ளது. இதனை உடனடியாக சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



கோவை மாவட்டம் வால்பாறை நகரத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் வணிக நிறுவனங்களும் தங்கும் விடுதிகளும் ஏராளமாக உள்ளன. அக்காமலை புல்வெளி பகுதியிலிருந்து வரும் நீரை கருமலை அருகே உள்ள தடுப்பணையில் தேக்கி வால்பாறைக்கு இயற்கை உந்து சக்தி மூலம் தரைமட்ட நீர் தொட்டியில் தேக்கி வால்பாறை நகருக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வால்பாறை நடு மலைச்சாலையில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக நடுமலை தேயிலைத் தோட்டம் அருகே சாலையில் ஓரத்தில் வந்து கொண்டிருக்கும் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.



இதனால் தடுப்பணையில் இருந்து வால்பாறைக்கு வரும் குடிநீர் முற்றிலும் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக நேற்று முதல் வால்பாறையில் குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நகராட்சி நிர்வாகம், உடைந்த குழாயை உடனடியாக மாற்றி குடிநீர் விநியோகத்தை சரி செய்யும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...