கோவை: கோவை அருகே மின்சார டிரான்ஸ்பார்மரில் மயில் அடிபட்டு இறந்ததில் 50 வீடுகளில் மின் சாதனங்கள் பழுதடைந்தன.
கோவை: கோவை அருகே மின்சார டிரான்ஸ்பார்மரில் மயில் அடிபட்டு இறந்ததில் 50 வீடுகளில் மின் சாதனங்கள் பழுதடைந்தன.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள புதுப்புதூர் தேவையாம் பாளையம் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் அருகே உள்ளன. இதனால் வனப்பகுதிகளில் இருந்து மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வாழ்வினங்கள் ஊருக்குள் வருவது வழக்கம். நேற்று மாலை 5 மணி அளவில் ஆண் மயில் ஒன்று கூடலூர் கவுண்டம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட மாணிக்கவாசகர் நகர் பகுதிக்கு வந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த டிரான்ஸ்பார்மரில் மோதி அடிபட்டு அதே இடத்தில் இறந்து விட்டது. டிரான்ஸ்பார்மரில் மயில் மோதியதால் டிரான்ஸ்பார்மர் வெடித்தது. அப்போது மாணிக்கவாசகர் நகர் பகுதியில் உள்ள 50 வீடுகளில் யுபிஎஸ் உள்ளிட்ட மின் சாதனங்கள் பழுதாகின.
இதுகுறித்து உடனடியாக மின் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின் ஊழியர்கள் டிரான்ஸ்பார்மரை சரி செய்தனர். உயிரிழந்த மயில் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் முறையான பிரேத பரிசோதனைக்கு பின் மயிலை அடக்கம் செய்தனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள புதுப்புதூர் தேவையாம் பாளையம் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் அருகே உள்ளன. இதனால் வனப்பகுதிகளில் இருந்து மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வாழ்வினங்கள் ஊருக்குள் வருவது வழக்கம். நேற்று மாலை 5 மணி அளவில் ஆண் மயில் ஒன்று கூடலூர் கவுண்டம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட மாணிக்கவாசகர் நகர் பகுதிக்கு வந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த டிரான்ஸ்பார்மரில் மோதி அடிபட்டு அதே இடத்தில் இறந்து விட்டது. டிரான்ஸ்பார்மரில் மயில் மோதியதால் டிரான்ஸ்பார்மர் வெடித்தது. அப்போது மாணிக்கவாசகர் நகர் பகுதியில் உள்ள 50 வீடுகளில் யுபிஎஸ் உள்ளிட்ட மின் சாதனங்கள் பழுதாகின.
இதுகுறித்து உடனடியாக மின் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின் ஊழியர்கள் டிரான்ஸ்பார்மரை சரி செய்தனர். உயிரிழந்த மயில் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் முறையான பிரேத பரிசோதனைக்கு பின் மயிலை அடக்கம் செய்தனர்.