தமிழகத்தில் உள்ள 8 ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிகிச்சைக்காக கொடுக்க தயார் என சத்குரு அறிவிப்பு!

கோவை: தமிழகத்தின்‌ பல்வேறு மாவட்டங்களில்‌ உள்ள 8 ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிகிச்சைக்காக தமிழக அரசுக்கு தர தயாராக இருப்பதாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு தெரிவித்துள்ளார்‌.


கோவை: தமிழகத்தின்‌ பல்வேறு மாவட்டங்களில்‌ உள்ள 8 ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிகிச்சைக்காக தமிழக அரசுக்கு தர தயாராக இருப்பதாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு தெரிவித்துள்ளார்‌.

இது தொடர்பாக சத்குரு தனது ட்விட்டர்‌ பக்கத்தில்‌ வெளியிட்டுள்ள பதிவில்‌, “ஈஷா வித்யா பள்ளி வளாகங்களை, 990 படுக்கை வசதியுடன் கூடிய கோவிட்‌ மையங்களாக பயன்படுத்திக்‌ கொள்ள தமிழக அரசுக்கு கொடுக்கிறோம்‌.

இந்த சவாலில் இருந்துவெளிவர நம்‌ சமூகம்‌ ஒன்றிணைந்து நிர்வாகத்தின்‌ கரங்களை பலப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்,” என கூறியுள்ளார். இதன்படி, கோவை, ஈரோடு, சேலம்‌, நாகர்கோவில்‌, தூத்துக்குடி, விழுப்புரம்‌, கடலூர்‌, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில்‌ உள்ள ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிசிச்சை மையங்களாக அரசு பயன்படுத்தி கொள்ள முடியும்‌.

இதேபோல்‌, கடந்தாண்டு கொரோனா நிவாரணப்‌ பணிகளுக்காக சத்குரு தனது பங்களிப்பாக மட்டும்‌ ரூ.1154 கோடியை வழங்கினார்‌. இந்த நிதி அவரது ஓவியங்களை ஆன்லைனில்‌ விற்பனை செய்ததன்‌ மூலம்‌ திரட்டப்பட்டது. தினமும்‌ ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு, கசாயம்‌ வழங்கி ஈஷா தன்னார்வ தொண்டர்கள்‌ ஏழைகளின் பசியை போக்கினர்‌.

மருத்துவ பணியாளர்கள்‌, காவல்‌ துறையினர்‌, தூய்மை பணியாளர்கள்‌ உள்ளிட்ட முன்‌ களப்‌ பணியாளர்களுக்கு முக கவசம்‌, சானிடைசர்‌ உதவிகளை வழங்கப்பட்டன. ராம மக்களுக்கு நிலவேம்பு கசாயம்‌ மற்றும்‌ கப சுர குழநீர்‌ வழங்கும்‌ பணிகள்‌ இப்போதும்‌ நடைபெற்று கொண்டிருக்கின்றன.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...