கோவை: கோவை உக்கடம் பெரியகுளத்தில் மீன்கள் இறந்து தண்ணீரில் மிதந்து வருகிறது. மீன்கள் இறப்புக்கு தண்ணீர் மாசுதான் காரணமென்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கோவை: கோவை உக்கடம் பெரியகுளத்தில் மீன்கள் இறந்து தண்ணீரில் மிதந்து வருகிறது. மீன்கள் இறப்புக்கு தண்ணீர் மாசுதான் காரணமென்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 100 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி மாத இறுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக உக்கடம் பெரிய குளம் திறக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவலால் மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இதனிடையே உக்கடம் பெரியகுளத்தில் மீன்கள் இறந்து மிதந்து வருகின்றன. இதனால் அப்பகுதிகளில் தூர்நாற்றம் வீசுகிறது.

தண்ணீர் மாசு அடைந்ததுவிட்டதால்தான் மீன்கள் இறந்துள்ளன என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘உக்கடம் பெரியகுளத்தில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இதுதவிர சாக்கடை தண்ணீர் கலக்காமல் இருக்க சுத்திகரிப்பு உபகரணங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. எனவே, தண்ணீர் மாசு அடைவது பெரும்பாலும் தடுக்கப்பட்டு வருகிறது. அண்மைக் காலமாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக தண்ணீரில் ஆக்சிஜன் குறைந்து மீன்கள் இறந்து இருக்கலாம். தற்போது இறந்த மீன்கள் மற்றும் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.’’ என்றார்.
கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 100 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி மாத இறுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக உக்கடம் பெரிய குளம் திறக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவலால் மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
இதனிடையே உக்கடம் பெரியகுளத்தில் மீன்கள் இறந்து மிதந்து வருகின்றன. இதனால் அப்பகுதிகளில் தூர்நாற்றம் வீசுகிறது.
தண்ணீர் மாசு அடைந்ததுவிட்டதால்தான் மீன்கள் இறந்துள்ளன என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘உக்கடம் பெரியகுளத்தில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இதுதவிர சாக்கடை தண்ணீர் கலக்காமல் இருக்க சுத்திகரிப்பு உபகரணங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. எனவே, தண்ணீர் மாசு அடைவது பெரும்பாலும் தடுக்கப்பட்டு வருகிறது. அண்மைக் காலமாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக தண்ணீரில் ஆக்சிஜன் குறைந்து மீன்கள் இறந்து இருக்கலாம். தற்போது இறந்த மீன்கள் மற்றும் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.’’ என்றார்.