திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் தொட்டி தயார் செய்யப்படுகிறது..!

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆறாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் தொட்டி தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆறாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் தொட்டி தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரக்கூடிய சூழ்நிலையில் தினசரி 300- க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 562 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஏற்கெனவே திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் மூன்றாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் தொட்டி அமைக்கப்பட்டு உள்ள சூழ்நிலையில் தட்டுப்பாடு நிலவுவதை தவிர்க்கும் வகையில் கூடுதலாக ஆறாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் தொட்டி தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.



நாள் ஒன்றுக்கு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு 1500 லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படும் அளவில் தேவைக்கு அதிகமாகவே இருப்பு வைக்கக்கூடிய அளவு தயார் நிலையில் இருப்பதாகவும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரெம்டெசிவர் மருந்து போதுமான அளவு கையிருப்பு உள்ளதாகவும், கொரோனா தொற்றால் அதிக பாதிப்புள்ள நபர்களுக்கு மட்டும் அதை பயன்படுத்தி வருவதாகவும், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் வள்ளி தெரிவித்துள்ளார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...