உடுமலையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள குவியும் மக்கள்.. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத அலட்சியம்..!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் குவிந்தனர். மக்களின் அலட்சியப்போக்கு, நோய்த்தொற்று பரவும் அபாயத்தை உருவாக்கி உள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் குவிந்தனர். மக்களின் அலட்சியப்போக்கு, நோய்த்தொற்று பரவும் அபாயத்தை உருவாக்கி உள்ளது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் கொரானா தடுப்பூசிகளான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு போடப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தத் தடுப்பூசிகளை முதல் முறை செலுத்திக்கொண்ட பொதுமக்கள் இரண்டாம் முறை செலுத்திக் கொள்ள மருத்துவமனையில் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் நாடு முழுவதும் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், புதிதாக தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பொதுமக்களும் அதிக அளவில் அரசு மருத்துவமனை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.





இதனால், மருத்துவமனை வளாகத்தில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு செல்வதால், கொரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைப் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் பொதுமக்களை வரிசையில் வரவேண்டுமென உத்தர விட்டாலும், அதனை பொதுமக்கள் யாரும் கடைபிடிப்பதில்லை. அலட்சியத்தோடு, கும்பலாக நின்று கொண்டு மருத்துவ ஊழியர்களிடம் கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பிரச்சினையைக் கட்டுப்படுத்த காவல் துறையை பாதுகாப்புக்கு அழைத்து, டோக்கன் வழங்கி தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து வருகிறது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...