வால்பாறையில் நடைபாதை வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், தனது வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
வால்பாறை: வால்பாறையில் நடைபாதை வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், தனது வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
வால்பாறையை அடுத்த இஞ்சி பாறை எஸ்டேட்டைச் சேர்ந்த 65 வயது வியாபாரி வால்பாறை நகரில் நடைபாதையில் துணி மற்றும் பாத்திரம் வியாபாரம் செய்து வருகிறார். இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர், வால்பாறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு கோவையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அங்குள்ள மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்துவிட்டு, மருத்துவமனையில் அனுமதித்துக் கொள்ளாமல், வீட்டிலேயே அவரைத் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கூறி அனுப்பி வைத்தனர்.
வால்பாறையை அடுத்த இஞ்சி பாறை எஸ்டேட்டைச் சேர்ந்த 65 வயது வியாபாரி வால்பாறை நகரில் நடைபாதையில் துணி மற்றும் பாத்திரம் வியாபாரம் செய்து வருகிறார். இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர், வால்பாறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு கோவையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அங்குள்ள மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்துவிட்டு, மருத்துவமனையில் அனுமதித்துக் கொள்ளாமல், வீட்டிலேயே அவரைத் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கூறி அனுப்பி வைத்தனர்.