திருப்பூரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் வழங்காத அலுவலருக்கு அபராதம்... மாநில தகவல் ஆணையம் நடவடிக்கை..!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் வழங்காத அலுவலருக்கு மாநில தகவல் ஆணையம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.


கோவை: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் வழங்காத அலுவலருக்கு மாநில தகவல் ஆணையம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் வழங்காத அலுவலருக்கு மாநில தகவல் ஆணையம் 25,000 ரூபாய் அபராதம் விதித்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆறுமுகம் பாளையத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் வயது 58, பனியன் தொழிலாளி. சில ஆவணங்களைக் கேட்டு பல்லடம் பொது தகவல் அலுவலருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விண்ணப்பித்திருந்தார். ஆனால், மூன்று மாதங்களாகியும் பதில் கிடைக்கவில்லை. இதனால், அதே ஆண்டு மே மாதம் மேல்முறையீட்டு அலுவலரிடம் விண்ணப்பித்தார். அதிலும் அரைகுறையான பதிலே கிடைத்தது.

இந்தநிலையில், ஆகஸ்ட் மாதம் இரண்டாவது முறையாக மீண்டும் மேல்முறையீடு செய்தார். உதாரணமாக மேல்முறையீட்டு மனுவின் மீது தொலைபேசி மூலம் விசாரணை நடந்தது. ஓர் ஆண்டுக்கு மேலாகியும் விண்ணப்பதாரரின் மனுவுக்கு பதில் கிடைக்காதது உறுதிசெய்யப்பட்டது. இதுகுறித்து மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் பிறப்பித்த உத்தரவில், ஒரு வார காலத்துக்குள் விண்ணப்பதாரர் கேட்ட தகவல்களை எந்தவித கட்டணமும் இன்றி ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு தபாலில் அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை அட்டையின் நகல் மற்றும் வழங்கப்பட்ட தகவல்களை அறிக்கையாக தயார் செய்து மாநில தகவல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். மனுதாரருக்கு தகவல் வழங்காத பொது தகவல் அலுவலருக்கு துணை தாசில்தார் 25,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...