கோவை கோர்ட்களில் ஆன்லைன் மூலமாக விசாரணை நடத்தப்படும்... மாவட்ட நீதிபதி அறிவிப்பு..!

கோவை: கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்திலுள்ள கோர்ட்களில் மீண்டும் ஆன்லைன் வாயிலாக விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட நீதிபதி அறிவித்துள்ளார்.


கோவை: கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்திலுள்ள கோர்ட்களில் மீண்டும் ஆன்லைன் வாயிலாக விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட நீதிபதி அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்திலுள்ள கோர்ட்களில், மீண்டும் ஆன்லைன் வாயிலாக விசாரணை நடத்தப்படும் என்று, மாவட்ட நீதிபதி அறிவித்துள்ளார். நீதிமன்ற விசாரணையில் கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும், ஹைகோர்ட் உத்தரவிட்டது. அதன் பேரில், மாவட்ட நீதிபதி சக்திவேல், நீதிமன்றத்தில் 26 முதல் வரும் 30 வரை கடைபிடிக்க வேண்டிய நடைமுறை குறித்து, அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதன்படி, அனைத்து நீதிமன்றங்களில், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வழக்குப் பட்டியல் குறித்த 'காலிங் ஒர்க்' இனி கிடையாது. இரு தரப்பு தயாராக உள்ள வழக்கு மட்டும், நேரடி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும். இது தொடர்பாக இரு தரப்பு வக்கீல்கள், இ-மெயில் வாயிலாக முன்கூட்டியே, விசாரணை கோர்ட்டிற்கு தெரிவிக்க வேண்டும். ஜாமின் மனுக்கள் மீதான விசாரணை, மறு உத்தரவு வரும் வரை இ-மெயில் வாயிலாக மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும். காணொளி வாயிலாக வாதிட விரும்பும் வக்கீல்கள், அது பற்றிய விவரத்தை, இ-மெயிலில் தெரிவிக்க வேண்டும். காணொளி வாயிலாக வக்கீல்கள் வாதிட, ஒதுக்கப்பட்ட தேதி மற்றும் நேரம் குறித்து கோர்ட் வாயிலாக தெரிவிக்கப்படும்.

கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு தொடர்பான ஆவணங்களை, நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள டிராப் பாக்சில், சீலிடப்பட்ட கவரில் வைத்து போட வேண்டும். நீதிமன்ற வளாகத்தில், பொதுமக்கள் தேவையின்றி நுழைய தடை விதிக்கப்படுகிறது. நீதிமன்றத்திற்கு வருவோர், கொரோனா தடுப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்ட வக்கீல்கள், நீதிமன்றம் வருவதை தவிர்த்து, வீடியோகான்பரன்ஸ் வசதிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பார் அசோசியேசன், அட்வகேட் சேம்பர், நூலகம் மற்றும் கேன்டீன் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...