உடுமலை அருகே நள்ளிரவில் பல கடைகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன. நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உடுமலை: உடுமலை அருகே நள்ளிரவில் பல கடைகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன. நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உடுமலையை அடுத்த கொழுமம் அமராவதி ஆற்றுப் பாலத்தின் அருகில் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் பல மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. சிமெண்ட் சீட்டுகள் மூலம் மறைக்கப்பட்டு தற்காலிகமாக இந்தக் கடைகள் செயல்பட்டு வந்தன. இந்தநிலையில், நேற்று நள்ளிரவில் இந்த கடைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதனையடுத்து, உடுமலைப்பேட்டையில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து குமரலிங்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
உடுமலையை அடுத்த கொழுமம் அமராவதி ஆற்றுப் பாலத்தின் அருகில் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் பல மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. சிமெண்ட் சீட்டுகள் மூலம் மறைக்கப்பட்டு தற்காலிகமாக இந்தக் கடைகள் செயல்பட்டு வந்தன. இந்தநிலையில், நேற்று நள்ளிரவில் இந்த கடைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதனையடுத்து, உடுமலைப்பேட்டையில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து குமரலிங்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.