கிணத்துக்கடவு தாமரைக் குளம் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

கோவை: கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் சேகரிக்கும் குப்பைகளை தாமரை குளம் பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே கொட்டப்பட்டு வருவதால் அங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் சேகரிக்கும் குப்பைகளை தாமரை குளம் பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே கொட்டப்பட்டு வருவதால் அங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



மேலும், ரயில்வே கேட் அருகே கொட்டப்பட்டு வரும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் அகற்றாமல் அலட்சியமாக இருப்பதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் குப்பைகள் தேங்கி கிடப்பதால், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் மழைநீரில் நனைந்து கடும் துர்நாற்றம் வீசும் நிலைமை ஏற்பட்டுள்ளது.



குப்பைகள் தேங்கிக் கிடக்கும் இடத்தில் கொசு உற்பத்தி அதிகரித்து வருவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.



ஏற்கனவே, கொரோனா நோய் தொற்றால் பெரும் இன்னல்களை சந்தித்து வரும் நிலையில், சுகாதாரமற்ற சூழலில் வாழ்வது டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவ காரணமாக அமையும் என்பதால், இனி வரும் நாட்களில் இது போல குப்பைகளை தேங்க விடாமல், உடனடியாக அகற்ற வென்ஸ் என்பதே தாமரைக்குளம் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...