கோவை: கோவையில் வீட்டுக்கு வந்த உறவினரை பக்கத்து வீட்டு நாய் கடித்த ஆத்திரத்தில் நாயை அடித்துக் கொன்றவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை: கோவையில் வீட்டுக்கு வந்த உறவினரை பக்கத்து வீட்டு நாய் கடித்த ஆத்திரத்தில் நாயை அடித்துக் கொன்றவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை பீளமேடு வ.உ.சி காலனியைச் சேர்ந்த பாலசுந்தரம்தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அவரது வீட்டின் அருகே சீனிவாசன் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
அண்மையில் சீனிவாசனின் வீட்டிற்கு அவரது உறவினர் ஒருவர் வந்தார். அவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சீனிவாசன் வீட்டுக்கு செல்ல முயன்றார். அப்போது அங்கு நின்றிருந்த பாலசுந்தரத்தின் நாய் அந்த நபரை பார்த்து குறைப்பதுடன் திடீரென அவரை கடித்து விட்டது. இதில் காயமடைந்த அவர் சம்பவம் குறித்து சீனிவாசனிடம் தெரிவித்தார். அவர் உடனடியாக உறவினரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெறுமாறு அனுப்பி வைத்தார்.
உறவினரை நாய் கடித்தால் ஆத்திரமடைந்த சீனிவாசன் தனது நண்பருடன் சேர்ந்து பாலசுந்தரத்தின் வீட்டிற்கு சென்றார். அங்கு சுற்றித் திரிந்த நாயை தரதரவென இழுத்து சாலைக்கு கொண்டு வந்து அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நாய் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடியது இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தடுக்க முயன்றனர். ஆனால் அவர்கள் யாருடைய பேச்சையும்கேட்காமல் தொடர்ந்து நாயை தாக்கினர். இதனால், சிறிது நேரத்தில் நாய் பரிதாபமாக உயிரிழந்து விட்டது.
இதுகுறித்து உடனடியாக அப்பகுதி மக்கள் விலங்குகள் நல அமைப்பினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் போலீசில் புகார் கொடுக்குமாறு நாயின் உரிமையாளரையும் அக்கம் பக்கத்தினர் அறிவுறுத்தினர். இதையடுத்து பாலசுந்தரம் பீளமேடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் போலீசார் சீனிவாசன் மற்றும் அவரது நண்பர் மீது விலங்குகளை கொல்லுதல் விலங்குகள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பீளமேடு வ.உ.சி காலனியைச் சேர்ந்த பாலசுந்தரம்தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அவரது வீட்டின் அருகே சீனிவாசன் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
அண்மையில் சீனிவாசனின் வீட்டிற்கு அவரது உறவினர் ஒருவர் வந்தார். அவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சீனிவாசன் வீட்டுக்கு செல்ல முயன்றார். அப்போது அங்கு நின்றிருந்த பாலசுந்தரத்தின் நாய் அந்த நபரை பார்த்து குறைப்பதுடன் திடீரென அவரை கடித்து விட்டது. இதில் காயமடைந்த அவர் சம்பவம் குறித்து சீனிவாசனிடம் தெரிவித்தார். அவர் உடனடியாக உறவினரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெறுமாறு அனுப்பி வைத்தார்.
உறவினரை நாய் கடித்தால் ஆத்திரமடைந்த சீனிவாசன் தனது நண்பருடன் சேர்ந்து பாலசுந்தரத்தின் வீட்டிற்கு சென்றார். அங்கு சுற்றித் திரிந்த நாயை தரதரவென இழுத்து சாலைக்கு கொண்டு வந்து அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நாய் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடியது இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தடுக்க முயன்றனர். ஆனால் அவர்கள் யாருடைய பேச்சையும்கேட்காமல் தொடர்ந்து நாயை தாக்கினர். இதனால், சிறிது நேரத்தில் நாய் பரிதாபமாக உயிரிழந்து விட்டது.
இதுகுறித்து உடனடியாக அப்பகுதி மக்கள் விலங்குகள் நல அமைப்பினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் போலீசில் புகார் கொடுக்குமாறு நாயின் உரிமையாளரையும் அக்கம் பக்கத்தினர் அறிவுறுத்தினர். இதையடுத்து பாலசுந்தரம் பீளமேடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் போலீசார் சீனிவாசன் மற்றும் அவரது நண்பர் மீது விலங்குகளை கொல்லுதல் விலங்குகள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.