கோவை: கோவையின் இருவேறு இடங்களில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்களில் 10 பவுன் நகை மற்றும் ரூ.15 லட்சம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையின் இருவேறு இடங்களில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்களில் 10 பவுன் நகை மற்றும் ரூ.15 லட்சம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
கோவை சிங்காநல்லூர் கோத்தாரி நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் (57), ஒண்டிப்புதூரில் மின்சார வாரிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த 23-ம் தேதி அவர் தனது சொந்த ஊரான நெல்லைக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். இன்று காலை திரும்பி வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டில் இருந்த 40 பவுன் தங்க நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மாரியப்பன் சிங்காநல்லூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் கைரேகை நிபுணர்கள் சகிதம் கொள்ளை நடந்த வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இதைப்போல கோவை சிங்காநல்லூர் அடுத்துள்ள மசக்காளிபாளையம் பிரபல தனியார் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் இன்று காலை வேலைக்கு வந்த அப்போது கடையின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
கடையில் வைத்திருந்த 13 லட்சத்து 84 ஆயிரம் ரொக்கப் பணத்தை காணாமல் போயிருந்தது. நேற்று ஊரடங்கு என்பதால் நிறுவனத்திற்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் கடையின் ஷட்டரை உடைத்து கடைக்குள் புகுந்து பணத்தை கொள்ளை அடித்திருப்பதுதெரியவந்தது.இது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை சிங்காநல்லூர் கோத்தாரி நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் (57), ஒண்டிப்புதூரில் மின்சார வாரிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த 23-ம் தேதி அவர் தனது சொந்த ஊரான நெல்லைக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். இன்று காலை திரும்பி வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டில் இருந்த 40 பவுன் தங்க நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மாரியப்பன் சிங்காநல்லூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் கைரேகை நிபுணர்கள் சகிதம் கொள்ளை நடந்த வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இதைப்போல கோவை சிங்காநல்லூர் அடுத்துள்ள மசக்காளிபாளையம் பிரபல தனியார் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் இன்று காலை வேலைக்கு வந்த அப்போது கடையின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
கடையில் வைத்திருந்த 13 லட்சத்து 84 ஆயிரம் ரொக்கப் பணத்தை காணாமல் போயிருந்தது. நேற்று ஊரடங்கு என்பதால் நிறுவனத்திற்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் கடையின் ஷட்டரை உடைத்து கடைக்குள் புகுந்து பணத்தை கொள்ளை அடித்திருப்பதுதெரியவந்தது.இது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.