கோவை: கோவையில் கடையில் ஏற்பட்ட தகராறில் சூடான் இளைஞரை 12 பேர் கொண்ட கும்பல் தாக்கியதால், அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை: கோவையில் கடையில் ஏற்பட்ட தகராறில் சூடான் இளைஞரை 12 பேர் கொண்ட கும்பல் தாக்கியதால், அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை போத்தனூர் ஈஸ்வர் நகரில் உள்ள ஒரு மேன்சனில் தங்கியுள்ள சூடான் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை மாலை போத்தனூரில் உள்ள ஒரு மளிகை கடையில் கூட்டம் அலைமோதியது. அப்போது மேன்ஷனில் தங்கியிருந்த சூடான் நாட்டு வாலிபரும் பொருட்கள் வாங்க அங்கு சென்றார்.
கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் கோண வாய்க்கால் பாளையத்தை சேர்ந்த இஷாந்த்(19) என்ற இளைஞருடன் சூடான் மாணவனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. . இதுகுறித்து இஷாந்த் தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
இஷாந்தின் நண்பர்கள் 11 பேர் மோட்டார் சைக்கிள்களில் சம்பவ இடத்திற்கு வந்தனர். சூடான் இளைஞர் தங்கியிருந்த அறைக்கு சென்றனர். சூடான் இளைஞருடன் இருந்த மாணவர்கள் உட்படமூன்று பேரும் 12 பேர் கும்பல் அடித்து உதைத்தது.
இதையடுத்து காயம் அடைந்தவர்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்கு பதிவு செய்து 12 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்..
கோவை போத்தனூர் ஈஸ்வர் நகரில் உள்ள ஒரு மேன்சனில் தங்கியுள்ள சூடான் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை மாலை போத்தனூரில் உள்ள ஒரு மளிகை கடையில் கூட்டம் அலைமோதியது. அப்போது மேன்ஷனில் தங்கியிருந்த சூடான் நாட்டு வாலிபரும் பொருட்கள் வாங்க அங்கு சென்றார்.
கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் கோண வாய்க்கால் பாளையத்தை சேர்ந்த இஷாந்த்(19) என்ற இளைஞருடன் சூடான் மாணவனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. . இதுகுறித்து இஷாந்த் தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
இஷாந்தின் நண்பர்கள் 11 பேர் மோட்டார் சைக்கிள்களில் சம்பவ இடத்திற்கு வந்தனர். சூடான் இளைஞர் தங்கியிருந்த அறைக்கு சென்றனர். சூடான் இளைஞருடன் இருந்த மாணவர்கள் உட்படமூன்று பேரும் 12 பேர் கும்பல் அடித்து உதைத்தது.
இதையடுத்து காயம் அடைந்தவர்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்கு பதிவு செய்து 12 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்..