காலியாக சென்ற கோவை - ஷார்ஜா 'ஏர் அரேபியா' விமானம்!

கோவை: பயணிகள் இல்லாமல், சரக்குகளும் இன்றி, கோவை - ஷார்ஜா இடையே இயக்கப்படும் 'ஏர் அரேபியா' விமானம் இன்று காலியாக திரும்பிச் சென்றது.


கோவை: பயணிகள் இல்லாமல், சரக்குகளும் இன்றி, கோவை - ஷார்ஜா இடையே இயக்கப்படும் 'ஏர் அரேபியா' விமானம் இன்று காலியாக திரும்பிச் சென்றது.

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருந்ததால் ஷார்ஜாவுக்கு இயக்கப்பட்ட 'ஏர் அரேபியா' விமானம் காலியாக திரும்பிச் சென்றது. இது குறித்து ஏர்போர்ட் வட்டாரங்கள் கூறியதாவது:

“ஐக்கிய அரபு நாடுகளில் பத்து நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும்ஷார்ஜா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் அந்நாட்டு மக்கள் மட்டும் பயணிக்கலாம் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை- ஷார்ஜா இடையே வாரத்தில் 5 நாட்கள்,இயக்கப்படும் 'ஏர் அரேபியா' நிறுவனத்தின் விமானத்தில் பயணிகளுடன், தமிழகத்தில் இருந்து பூக்கள், மாம்பழம் உள்ளிட்டவையும் ஏற்றிச் செல்லப்படும்.

ஆனால், நேற்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் வழக்கமாக தென் மாவட்டங்களில் இருந்து பூக்கள், சேலத்திலிருந்து மாம்பழம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படவில்லை.

சரக்குகளை பேக்கிங் செய்ய தொழிலாளர்கள் வராத காரணத்தாலும் இன்று காலை ஷார்ஜாவுக்கு புறப்பட்ட விமானத்தில் சரக்குகள் எதுவும் ஏற்றப்படவில்லை. வழக்கமாக அனுப்பப்படும் இன்ஜினியரிங், தொழில்துறை உபரகணங்கள் ஏற்றுமதி செய்வதற்கு முன் பதிவு செய்யப்படவில்லை.

இந்த விமானத்தில் அதிகபட்சம் 3 டன் வரை சரக்குகள் ஏற்றப்படும். தற்போது இங்கிருந்து பயணிகள் செல்ல அனுமதி இல்லாத காரணத்தால் 9 டன் வரை சரக்குகள் வாய்ப்பு உள்ளது. முன்னதாக இன்று அதிகாலை கோவையில் தரையிறங்கிய இந்த விமானத்தில், ஷார்ஜாவிலிருந்து 100க்கும் மேற்பட்ட பயணிகள் வந்தனர்.” இவ்வாறு, ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...