வால்பாறையில் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம்!

கோவை: வால்பாறையில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் சென்றவர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.


கோவை: வால்பாறையில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் சென்றவர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் ஏராளமான வாகன விதிமுறைமீறல்கள் நடப்பதால் அவர்கள் மீது தீவிரமாக நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டுவது, ஒரே வாகனத்தில் மூன்று அல்லது நான்கு பேர் பயணம் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. பெரும்பாலானோர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர். இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளர் முருகையா தலைமையிலான குழுவினர் வால்பாறை காந்தி சிலை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.



அப்போது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்கள், இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் அதிகப்படியான பயணம் செய்தவர்கள் ஆகியோரை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வரை இந்த வாகன தணிக்கை சோதனை நடைபெறும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...