கோவை: கோவையில் ஊரடங்கை பயன்படுத்தி டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 11 லட்சம் ரூபாய் பணம் உள்பட மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் ஊரடங்கை பயன்படுத்தி டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 11 லட்சம் ரூபாய் பணம் உள்பட மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கொரோனோ வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 4 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், முழு ஊரடங்கை பயன்படுத்தி கோவை லாலி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் கடையின் உள்ளே இருந்த 10.72 லட்சம் ரொக்கம் மற்றும் 3 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது குறித்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் கூறும் போது, சனிக்கிழமை விடுமுறை என்பதால் கடந்த வெள்ளக்கிழமை வருமானம் 3 லட்சம் ரூபாய் மற்றும் முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை ஒன்பது மணி வரை வருமானம் ஏழு லட்சம் ரூபாய் உள்பட 10.72 லட்சம் ரூபாய் பணத்தை கடையினுள் வைத்து பூட்டி விட்டு சென்றதாகவும், இன்று மதியம் வழக்கம் போல் கடையை திறக்க வரும்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.எஸ்.புரம் போலீசார் கடையின் கல்லாபெட்டியில் வைக்கப்பட்டிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தை உறுதி செய்ததோடு, அருகிலிருந்த சிசிடிவிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வரும் போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கொரோனோ வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 4 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், முழு ஊரடங்கை பயன்படுத்தி கோவை லாலி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் கடையின் உள்ளே இருந்த 10.72 லட்சம் ரொக்கம் மற்றும் 3 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது குறித்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் கூறும் போது, சனிக்கிழமை விடுமுறை என்பதால் கடந்த வெள்ளக்கிழமை வருமானம் 3 லட்சம் ரூபாய் மற்றும் முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை ஒன்பது மணி வரை வருமானம் ஏழு லட்சம் ரூபாய் உள்பட 10.72 லட்சம் ரூபாய் பணத்தை கடையினுள் வைத்து பூட்டி விட்டு சென்றதாகவும், இன்று மதியம் வழக்கம் போல் கடையை திறக்க வரும்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.எஸ்.புரம் போலீசார் கடையின் கல்லாபெட்டியில் வைக்கப்பட்டிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தை உறுதி செய்ததோடு, அருகிலிருந்த சிசிடிவிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வரும் போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.