கோவை: மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் நில ஆக்கிரமிப்பை தடுக்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை: மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் நில ஆக்கிரமிப்பை தடுக்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் பெள்ளாதி பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான நீர் வழிப்பாதை மற்றும் கருப்பராயன் கன்னிமார் கோயில் இடத்தை ஆக்கிரமித்து நீர் வழிப் பாதையை மூடியுள்ளதால், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர் வழிப்பாதை மற்றும் செக் டேம் தடை படுவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்டக் குழு கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர்வழிப் பாதை தடைப்பட்டு உள்ளதால், இப்பகுதியில் உள்ள விவசாயத்தை நம்பி வாழும் விவசாயிகளும் பொது மக்களும் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும், நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து அவற்றை வீட்டு மனைகளாகப் பிரித்து வீடு கட்டி விற்பனை செய்ய ஏற்பாடு செய்து வருகின்றவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆக்கிரமிப்பு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர்வழி பாதையையும் மற்றும் செக் டேம் ஆகியவற்றை பாதுகாப்பாக மீட்டெடுத்து அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்ட குழு சார்பாக ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் பெள்ளாதி பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான நீர் வழிப்பாதை மற்றும் கருப்பராயன் கன்னிமார் கோயில் இடத்தை ஆக்கிரமித்து நீர் வழிப் பாதையை மூடியுள்ளதால், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர் வழிப்பாதை மற்றும் செக் டேம் தடை படுவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்டக் குழு கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர்வழிப் பாதை தடைப்பட்டு உள்ளதால், இப்பகுதியில் உள்ள விவசாயத்தை நம்பி வாழும் விவசாயிகளும் பொது மக்களும் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும், நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து அவற்றை வீட்டு மனைகளாகப் பிரித்து வீடு கட்டி விற்பனை செய்ய ஏற்பாடு செய்து வருகின்றவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆக்கிரமிப்பு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர்வழி பாதையையும் மற்றும் செக் டேம் ஆகியவற்றை பாதுகாப்பாக மீட்டெடுத்து அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்ட குழு சார்பாக ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.